2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

விறகு வெட்டும் போர்வையில் காடழிப்பு

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட முட்கொம்பன் பகுதியில் விறகு வெட்டுதல் என்ற போர்வையில் சட்டவிரோதமான முறையில் பெருமளவான காடுகள் அழிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் பிரதேச செயலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இரவு வேளைகளில் காடுகளுக்கு நுழையும் சிலர் பாலை, முதிரை போன்ற பெறுமதி மிக்க காட்டு மரங்களை வெட்டுகின்றனர். பகல் வேளையில் சிறிய கப்ரக வாகனங்கள் மற்றும் சிலவேளைகளில் பெரிய வாகனங்களிலும் அதனை எடுத்துச் செல்கின்றனர்.

நாளாந்தம் நடைபெறும் இந்நடவடிக்கையால் பெருமளவு காட்டு மரங்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மக்கள் கோரியுள்ளனர்.

பொலிஸார் மற்றும் வனவளப் பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றுக்கு தகவல் வழங்கியும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லையென மக்கள் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X