2025 ஜூன் 30, திங்கட்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொதிகள் வழங்கல்

Kogilavani   / 2015 நவம்பர் 20 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வசித்து வரும் 545 குடும்பங்களுக்கு வடக்கு மாகாண விவசாய அமைச்சினால், இன்று வெள்ளிக்கிழமை உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன.

வடக்கு மாகாண முதலமைச்சரின் பணிப்புரைக்கு அமைவாக இவை வழங்கப்பட்டன.

இதன்போது 13 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 545 குடும்பங்களைச் சேர்ந்த 2019 பேருக்கு உலர் உணவுப் பொதிகள்  வழங்கப்பட்டன.

வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  வடக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா, மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்டான்லி டி மேல், மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார், மன்னார் பிரதேசச் செயலக நிர்வாக அலுவலகர் ராதா பெர்ணான்டோ மற்றும் கிராம அலுவலகர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஒரு குடும்பத்துக்கு 1099 ரூபாய் பெறுமதியுடைய உலர் உணவுப்பொதிகள் இதன்போது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X