2025 ஜூன் 30, திங்கட்கிழமை

வாழ்வாதார உதவித்திட்டம்

George   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

கிராம அபிவிருத்தித் திணைக்களத்தால் மாகாண அபிவிருத்தி நன்கொடையின் கீழ் (Pளுனுபு)இ யாழ். மாவட்ட வேலணை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட வேலணை கிழக்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு, மோர் மிளகாய் பதனிடும் உபகரணங்களுக்கு 05 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றது. 

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் பா.கஜதீபன், அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன், வேலணை பிரதேச செயலாளர் திருமதி.சு.தெய்வேந்திரம், மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், அக்கிராமத்து மக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X