Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
George / 2016 மே 11 , மு.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
"இலங்கை மக்களின் வாழ்வாதாரத்துக்கு கனடா அரசாங்கம் ஆதாரமாக இருக்கும்" என கனடாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் எச்.ஈ.செல்லி விட்டிங் தெரிவித்தார்.
கிளிநொச்சி பூநகரி முக்கொம்பனில் யு.என்.டிபி மற்றும் எவ்.ஓ.ஏ ஆகிய நிறுவனங்களின் 4 மில்லியன் ரூபாய் நிதியில் அமைக்கப்பட்ட பால் உற்பத்தி பதனிடல் நிலையத்தை செவ்வாய்க்கிழமை (10) திறந்து வைத்தபின்னர் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கூறுகையில், "இந்த பிரதேசத்தில் பால் உற்பத்தி நிலையமும் பதனிடல் நிலையமும் ஒருங்கே அமைவது பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்கு பெரும் துணையாக இருக்கும். ஒற்றுமையாக பண்ணையாளர்கள் செயற்படுவதன் மூலம் இந்நிலையம் வளர்ச்சியடையும்.
இந்த நிலையத்தின் பயனாளிகளாக அதிகளவு பெண்கள் இருக்க வேண்டும். இந்நிலையத்தின் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு பால் உணவுப் பொருட்கள் கிடைக்கவேண்டும்" என்றார்.
யு.என்.டி.பி நிறுவனத்தின் வதிவிடப் பிரதிநிதி பீற்றர் பச்சிலர், கனடா உயர்ஸ்தானிகர் அலுவலக ஆலோசகர் ஜெனிபர் லலோன்டி, பூநகரிப் பிரதேச செயலர் சி.ச.கிருஸ்ணேந்திரன், கிளிநொச்சி கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் திருமதி க.நல்லதம்பி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
54 minute ago