Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2016 ஜனவரி 28 , மு.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு, துவரங்குளம் விவசாய நிலங்களை, விவசாய நடவடிக்கைகளுக்காக தங்களிடம் கையளிக்குமாறும் துவரங்குளத்தை புனரமைத்து தருமாறும் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த நிலங்கள் துப்பரவு செய்யப்பட்டுள்ளபோதும் அவை, வனவள திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவற்றைப் பகிர்ந்தளிப்பதில் சிக்கல்கள் காணப்படுகின்றன எனவும் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள வன்னிவிளாங்குளம், அம்பாள்புரம் விவசாயிகள் மிக நீண்டகாலமாக பயிர்ச் செய்கைகளை மேற்கொண்டு வந்த நிலங்கள், கடந்த யுத்தத்தினால் கைவிடப்பட்டு பற்றைக்காடு மண்டிக்காணப்பட்டது.
அந்நிலங்கள் மீள்குடியமர்வின் பின்னர் துப்பரவு செய்யப்பட்டுள்ளபோதும் இதுவரை விசாயச் செய்கைகளுக்காக விவசாயிகளிடம் கையளிக்கப்படவில்லை.
இக்காணிகளை தங்களின் பயிர்ச் செய்கைகளுக்கு வழங்குமாறு கோரியுள்ள அம்பாள்புரம், வன்னிவிளாங்குளம் விவசாயிகள் துவரங்குளத்தினையும் புனரமைத்து தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago