2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

வடிகான்களை அமைத்து தருமாறு கோரிக்கை

Kogilavani   / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஹிஜ்ராபுரம், நீராவிப்பிட்டி, தண்ணீறூற்று ஆகிய கிராமங்களில் உள்ள வீதியோர வடிகான்களை உடனடியாக அமைத்து தருமாறு  கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

குறித்த கிராமங்களில் மீள்குடியேற்றத்துக்கு பின்னரான காலப்பகுதியில் இன்றுவரைக்கும் வடிகாலமைப்புக்கள் ஒழுங்கான முறையில் அமைக்கப்படவில்லையென கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனால் மழை காலங்களில் வெள்ள நீர் வழிந்தோட முடியாமல் வீதியிலேயே தேங்கி நிற்பதாகவும், இதனால் குறித்த கிராமங்களிலுள்ள உளவீதிகள் கடுமையாக சேதமடைந்து காணப்படுவதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

தொடர்ச்சியாக மழை பெய்துவருவதனால் உள்வீதிகள் போக்குவரத்து செய்ய முடியாதளவுக்கு சேதமடைந்து காணப்படுவதாக நீராவிப்பிட்டி கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, ஹிஜ்ராபுரம், நீராவிப்பிட்டி ஆகிய கிராமஙகளில் சுத்தமான குடிநீரைப் பெறுவதிலும் கிராமமக்கள் அளெகரியங்களை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிடுகின்றனர்.

மழையினால் குடிநீரைப் பெற்றுக்கொள்ளும் பொதுக்குழாய் கிணற்று நீரின் தன்மை மாறியிருப்பதுடன், அதனை குடிப்பதற்கு பயன்படுத்துவதில் சுகாதார பிரச்சினை காணப்படுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த பொதுத் தேர்தலின் போது பிரசார நடவடிக்கைகளுக்காக வருகை தந்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இந்த பிரதேசத்தில் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்ள குடிநீர்த்திட்டமொன்றை வழங்குவதாகக் குறிப்பிட்டிருந்தார் எனவும் மக்கள் கூறுகின்றனர்.

எனவே, மு.கா தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தற்போது நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கம் அமைச்சராக இருக்கும் நிலையில், முல்லைத்தீவு ஹிஜ்ராபுரம், நீராவிப்பிட்டி, தண்ணீரூற்று ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய வகையில் சுத்தமான குடிநிர் வசதியைப் பெற்றுக்கொள்ள குடிநிர்த்திட்டமொன்றை உடனடியாக ஆரம்பித்துத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அத்துடன், சேதமடைந்துள்ள நீராவிப்பிட்டி கிராம உள்வீதிகளையும், ஹிஜ்ராபுரம், நீராவிப்பிட்டி, தண்ணீரூற்று ஆகிய கிராமங்களில் முறையான வீதியோர வடிகாலமைப்பு வசதிகளையும் பெற்றுக்கொடுப்பதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X