2025 ஜூன் 30, திங்கட்கிழமை

வடமாகாண ஆளுநரின் முதலாவது கூட்டம்

Niroshini   / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

வடமாகாண ஆளுநர் ரெஜினால்ட் குரே தலைமையில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் விசேட கூட்டம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (05) நடைபெற்றது.

மாவட்டத்தின் மீள்குடியேற்றம் அதன் பின்னரான அபிவிருத்தி மக்களின் தேவைகள் மற்றும் மாவட்டத்திலுள்ள பிரச்சினைகளை ஆராயும் வகையில் ஆளுநரால் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம், 4 பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு விடயங்களை ஆளுநருக்கு தெளிவுபடுத்தினர்.

வடமாகாண ஆளுநராக ரெஜினால்ட் குரே பொறுப்பேற்றப் பின்னர் கிளிநொச்சியில் நடத்துகின்ற முதலாவது கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X