2025 ஜூன் 30, திங்கட்கிழமை

வடமாகாண ஆளுனர் மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு விஜயம்

Niroshini   / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட், சண்முகம் தவசீலன்

வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே, செவ்வாய்க்கிழமை (05) காலை மன்னாருக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு வருகை தந்த ஆளுநரை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய வரவேற்றார். அதனைத்தொடர்ந்து, மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய, மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல், பிரதேச செயலாளர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர்கள், அரச திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித்திட்டங்கள் குறித்தும் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X