2025 ஜூன் 30, திங்கட்கிழமை

வறிய குடும்பங்களுக்கு இலவசமாக சீமேந்து பக்கற்றுக்கள் வழங்கி வைப்பு

Niroshini   / 2016 ஏப்ரல் 11 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஒரு வருட பூர்த்தியை  முன்னிட்டு நாடளாவிய ரீதியில் வறிய குடும்பங்களுக்கு முன்னெடுக்கப்பட்டு வரும் இலவச சீமேந்து பக்கற்றுக்கள் வழங்கும் நிகழ்வு  மன்னாரிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பிரதம் ரணில் விக்கிரமசிங்கவின் வழி காட்டலின் கீழ் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாசவின் பணிப்பில், கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நெறிப்படுத்தலின் கீழ் குறித்த குடும்பங்களுக்கு சீமேந்து பக்கெற்றுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள வறிய குடும்பங்களுக்கு நேற்று (10) முதல் குறித்த சீமேந்து பக்கெற்றுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மன்னார் மாவட்டத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வு மன்னார் மூர் வீதி மற்றும் தாழ்வுபாட்டு  ஆகிய கிராமங்களில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மன்னார்  தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் ஆர்.சுவர்னராஜா, ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட முகாமையாளர் ரஞ்சித் பெர்னாண்டோ, கட்சியின் மாவட்ட அமைப்பாளர் அப்துல் சமியூ முஹம்மது பஸ்மி, கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் பெர்னாண்டோ கூஞ்ஞ மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களின் பூரண ஒத்துழைப்புடன் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக சீமேந்து பக்கெற்றுக்கள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X