2025 ஜூன் 07, சனிக்கிழமை

‘வள நிலையம் விரைவில் இயங்கும்’

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

 

கிளிநொச்சி - அக்கராயன் வள நிலையம் விரைவில் இயங்கவுள்ளதாக,  கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் த.ஜோன்குயின்ரஸ் தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், அக்கராயன் ஆசிரிய வள நிலையத்தின் புனர்நிர்மாணப் பணிகள் நிறைவடைந்து வருவதாகவும், புனர்நிர்மாணப் பணிகள் நிறைவடைந்ததும், கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் தற்போது செயற்பட்டுவரும் ஆசிரிய வள நிலையச் செயற்பாடுகள் அக்கராயன் ஆசிரிய வள நிலையத்துக்கு மாற்றப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், தற்போது அக்கராயன் ஆசிரிய வள நிலையம் இயங்கிவரும் கட்டடம், மத்திய மகா வித்தியாலய நிர்வாகத்திடம் கையளிக்கப்படுமென, அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .