Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Princiya Dixci / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்வாதாரத் தேவைகளுக்காக வளர்க்கப்படும் கால்நடைகள் கடத்தப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டும் வருகின்றன.
கடந்த கால யுத்தம் காரணமாக வாழ்வாதாரங்களை இழந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறியுள்ள குடும்பங்கள் தமது வாழ்வாதாரத் தேவைகளுக்காக கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்பு என்பவற்றை மேற்கொண்டு வருகின்றன.
பாரதிபுரம், மலையாளபுரம், மணியங்குளம், பொன்னகர், கண்டாவளை மற்றும் பன்னங்கண்டி ஆகிய பகுதிகளில் வசித்து வரும் மிகவும் வறிய குடும்பங்கள் தமது வாழ்வாதாரத் தேவைகளுக்கு வளர்த்து வரும் கால்நடைகள் மற்றும் கோழிகள், இரவு வேளைகளில் திருடப்பட்டு, இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன.
இவ்வாறான கால்நடைகள் கடத்தல்களும் கோழிக்களவுகளும், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் வயோதிபக்குடும்பங்கள் ஆகிய வீடுகளிலேயே அதிகம் இடம்பெற்று வருகின்றன.
பகல் வேளைகளில் சிறிய ரக வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் வீடுகள் நோட்டமிட்டு இரவு வேளைகளில் இவ்வாறான களவுகள் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறு அண்மையில் கயஸ் வாகனம் ஒன்றில் ஊரியான் பகுதியில் இரு ஆடுகள் கடத்தப்பட்டமை பன்னங்கண்டிப் பகுதியில் வளர்ப்பு பசுமாடு ஒன்று இறைச்சிக்காக இரவு வேளை களவாக வெட்டப்பட்டமை போன்ற சம்பவங்கள் காணப்படுகின்றன.
வாழ்வாதாரத் தேவைகளுக்கான கால்நடைகள் கடத்தப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டு வருகின்றமையால் இதனை நம்பி வாழும் குடும்பங்கள் பெரும் வாழ்வாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலை காணப்படுகின்றது.
இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago