2025 ஜூலை 16, புதன்கிழமை

வவுனியா இளைஞனின் சாதனைப் பயணம் ஆரம்பம்

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 08 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

இலங்கையில் முதியோர் இல்லங்களை இல்லாதொழிப்பதற்கு 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, வவுனியா இளைஞனான த. பிரதாபனால் இலங்கையைச் சுற்றி துவிச்சக்கரவண்டியில் பயணம் மேற்கொள்ளும் நடவடிக்கை, நேற்று (07) ஆரம்பமானது.

வவுனியா கந்தசாமி கோவில் முன்பாக நேற்றுக் காலை 8 மணிக்குத் தனது பயணத்தினை ஆரம்பித்த இவர், 1515 கிலோமீற்றர் தூரத்தினை சுற்றிவரவுள்ளார்.

சுமார் 11 நாட்களில் இலங்கை சுற்றி வருவதற்கான கால எல்லையை நிர்ணயித்து தனது பயணத்தினை இவர் தொடங்கியுள்ளதுடன், வவுனியா கலை இலக்கிய நண்பர்கள வட்டம் ஆதரவினை வழங்கியுள்ளது.

இச் சாதனைப்பயணத்தின் ஆரம்ப நிகழ்வில் வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், வட மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி. லிங்கநாதன், எம். தியாகராசா, செ. மயூரன் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X