2025 ஜூன் 30, திங்கட்கிழமை

வவுனியா சிதம்பரபுரம் மக்களுக்கு காணிகள்

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வவுனியா

வவுனியா சிதம்பரபுரம் முகாமில் வாழும் மக்களுக்கு அதே இடத்தில் காணிகள் வழங்கப்படவுள்ளதுடன், அதற்கான அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண புனர்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கத்தின் ஊடகப் பிரிவின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'நாட்டின் அசாதாரண  சூழ்நிலைகளால் உள்ளக மற்றும் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து நாடு திரும்பியவர்களில் 193 குடும்பங்கள், கடந்த 20 வருடங்களாக சிதம்பரபுரம் முகாமில் வாழ்ந்து வருகின்றனர். அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்துவரும் இவர்களின் நிலை தொடர்பில் வடக்கு மாகாண புனர்வாழ்வு அமைச்சின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து, இவர்களுக்கு குடும்பமொன்றுக்கு தலா நான்கு பரப்புக் காணி வழங்கப்பட்டு, அதற்கான காணி அனுமதிப்பத்திரமும் வழங்கப்படவுள்ளது.
    
காணி அனுமதிப்பத்திரமும் தற்காலிக வீடுகள் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 19.04.2016 அன்று வடக்கு மாகாண புனர்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம் தலைமையில் நடைபெறவுள்ளது.  இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளவுள்ளார்.

இவர்கள் குடியிருப்பதற்கான தற்காலிக வீடுகள் அமைப்பதற்கு மாகாண புனர்வாழ்வு அமைச்சு ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 69,000 நிதி வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X