2025 ஜூன் 30, திங்கட்கிழமை

வவுனியாவில் 3875 ஏக்கரில் சிறுபோகம்

Niroshini   / 2016 மே 12 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியாவில் 3,875 ஏக்கர் காணியில் சிறுபோக பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கமநலசேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் எஸ்.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் சிறுபோக நெற் செய்கை தொடர்பில் கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் இவ்வாண்டு பதின்னான்காயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்பயிர்செய்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரட்சி காரணமாக சிறுபோக பயிர்செய்கையில் ஈடுபடுவோரின் அளவு குறைவடைந்துள்ளது.

அதன்படி 3,875 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதில் 621 ஏக்கர் சிறுபோக காணியில் மேட்டுநில பயிர்களான கச்சான், சோழம் போன்ற பயிர்கள் பயிரிடப்டபட்டுள்ளன.

அத்துடன் மேட்டு நிலப் பயிர்செய்கை மூவாயிரத்து 300 ஏக்கர் காணியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X