2025 ஜூன் 30, திங்கட்கிழமை

வவுனியாவில் செயலமர்வு

Niroshini   / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் பெண்கள் விவகார திணைக்களத்தின் ஏற்பாட்டில் நீண்டகால அடிப்படையில் பெண்களது உரிமைகளை உறுதிப்படுத்தவது தொடர்பிலான செயலமர்வு  இன்று செவ்வாய்க்கிழமை வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலமர்வில் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக சேவை உத்தியோகத்தர்கள், பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள இந்த செயலமர்வானது, முடிவில் மாகாண மட்ட செயலமர்வின் அறிக்கை, கொள்கை ஆவணமாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது.

இன்றைய ஆரம்ப நிகழ்வில், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருவாகரன், உதவிச்செயலாளர் சுஜீவா, சுகாதார அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ப.சத்தியசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X