Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
George / 2016 மே 16 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியாவில் அடை மழை காரணமாக 451 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 848 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் டி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன் சில பகுதிகளில் போக்குவரத்து பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளன.
வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் மழை காரணமாக 74 குடும்பங்களைச் சேர்ந்த 295 பேரும், வவுனியா பிரதேச செயலக பிரிவில் 372 குடும்பங்களைச் சேர்ந்த 1437 பேரும், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேரும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 4 பேருமாக 451 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 848 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
11 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் ஒரு நலன்புரிநிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. வவுனியா மருக்காரம்பளை பகுதியில் ஒரு நலன்புரி நிலையம் அமைக்கப்பட்டு, அங்கு ஒரு குடும்பம் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் 18 குடும்பங்களைச் சேர்ந்த 71 பேர் உறவிகர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மழை காரணமாக குளத்து நீர்மட்டம் அதிகரித்து தாண்டிக்குளம், திருநாவற்குளம் போன்ற குளங்களும் வான் பாய ஆரம்பித்துள்ளதுடன், செட்டிகுளம் - பூவரசன்குளம் வீதியை ஊடறுத்து 7 அடி உயரத்திலும், சின்னசிப்பிகுளம் - செட்டிகுளம் வீதியை ஊடறுத்து 4 அடி உயரத்தில் நீர் பாய்ந்து வருகின்றது. இதனால் செட்டிகுளம் - பூவரசன்குளம் வீதியில் படகு மூலம் போக்குவரத்து மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago