2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

வவுனியாவில் மாவீரர் தின சுவரொட்டிகள்

Gavitha   / 2015 நவம்பர் 20 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்,ரொமேஷ் மதுஷங்க

வவுனியா நகரப் பகுதியில், மாவீரர் தின சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

வவுனியா பஸ்நிலையம், சுற்றுவட்ட வீதி, இலுப்பையடி, சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய வீதி என்பவற்றில் மதில்கள், விளம்பர பலகைகள், வீதிப் பலகைகள் என்பவற்றில் இச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

மாவீரர் நாள் நவம்பர் 25 -27, 2015 என தலைப்பிடப்பட்டு, ஏ4 அளவிலான தாளில் அச்சிடப்பட்டு மாவீரர் நாளை கோவில்கள், பாடசாலைகள், வீடுகள், பொது இடங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றில் உணர்வெழுச்சியுடன் கொண்டாடுவோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம் என அத்துண்டு பிரசுரத்தின் இறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .