Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 07, சனிக்கிழமை
க. அகரன் / 2018 ஜனவரி 16 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியாவில் கடமையாற்றும் பாடசாலை ஆசிரியர்களிடம் வட மாகாண திட்டமிடல் கிளையில் இருந்து தொடர்பு கொள்வதாகக் கூறி பணம் பறித்து வரும் சம்பவங்கள் தொடர்பில், ஆசிரியர்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியாவிலுள்ள பிரபல பாடசாலைக்கு, கடந்த வெள்ளிக்கிழமை (12) அழைப்பை மேற்கொண்ட நபரொருவர் தான் வட மாகாண திட்டமிடல் கிளையில் பணியாற்றும் என்.எஸ்.கிரிசாந்தன் எனத் தெரிவித்து, பாடசாலையில் கடமையாற்றும் கணவனை இழந்த ஆசிரியைகளின் விவரங்களை கோரியுள்ளார்.
பாடசாலை பிரதி அதிபரும் தமது பாடசாலையில் கற்பிக்கும் கணவனை இழந்த ஆசிரியைகள் இருவரின் அலைபேசி இலக்கங்களையும் அவர்களின் சேவைக்காலம் மற்றும் ஏனைய விவரங்களையும் வழங்கியுள்ளார்.
இந்நிலையில், குறித்த நபர் சம்பந்தப்பட்ட ஆசிரியைகளுக்கு அழைப்பை ஏற்படுத்தி, வட மாகாண திட்டமிடல் கிளையால் 7 இலட்சம் ரூபாய் தங்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அதனை பெற்றுக் கொள்ள சனிக்கிழமை 10 மணிக்கு 56 ஆயிரம் ரூபாய் பணத்துடன் மாகாண அலுவலகத்துக்கு வருமாறும் தெரிவித்துள்ளார்
எனினும் குறித்த ஆசிரியர்கள் பாடசாலை அதிபருடன் தொடர்புகொண்டு கேட்டபோது,
அவ்வாறு ஒரு நடைமுறை இருக்குமானால் வட மாகாணசபை எழுத்து மூலம் அறிவிக்கும் எனவும், பணத்தைக் கொண்டு செல்லவேண்டாம் எனவும் அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், திங்கட்கிழமை (15) மாகாண திட்டமிடல் கிளைக்கு தொடர்பை ஏற்படுத்திய அதிபர், குறித்த சம்பவம் தொடர்பாக வினாவியபோது, அவ்வாறான நபரொருவர் தமது திணைக்களத்தில் இல்லை என, திணைக்களத்தினர் கூறியுள்ளனர்.
எனவே, இவ்விடயம் தொடர்பாக, அவதானமாக இருக்குமாறு, ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago