2025 மே 21, புதன்கிழமை

வவுனியா மாவட்ட செயலகத்தில் அதிரடி சோதனை

க. அகரன்   / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா மாவட்ட செயலகத்தில் விசேட அதிரடிப்படையினரால் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெறவுள்ள நிலையில் இச் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதுவரைகாலமும் அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு இவ்வாறான சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத நிலையில் அரச உத்தியோகத்தர்கள் பங்கேற்கும் கூட்டத்திற்கு இவ்வாறு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை விசனத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை குறித்த கூட்டத்திற்கு அமைச்சர் ரிசாட் பதியுதீனும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .