Editorial / 2020 ஜூன் 28 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா – கண்டி வீதியில், இன்று (28) முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவில் இருந்து கொழும்பு நோக்கி மீன்களை ஏற்றிச் சென்ற வாகனம், வேகக் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த சைக்கிளுடன் மோதுண்டு, வீதியருகே இருந்த மின்சாரக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது, சைக்கிளைச் செலுத்திச் சென்ற மகேஷ்வர ரட்ணசிங்கம் (வயது - 59) என்ற வயோதிபர் படுகாயமடைந்தார்.
அத்துடன், விபத்தில் உயர் அழுத்த மின்சார தூண் முழுமையாக சேதமடைந்து, வாகனத்தின் மீது சரிந்து விழுந்தது.
எனினும், வாகனத்தின் சாரதி அதிர்ஷ்டவசமாக காயங்களின்றி உயிர் பிழைத்துள்ளார்.
4 minute ago
17 minute ago
32 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
17 minute ago
32 minute ago
33 minute ago