2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இந்தவார பலன்கள் (01.04.2012 - 07.04.2012)

A.P.Mathan   / 2012 மார்ச் 31 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இந்தவார பலன்கள் (01.04.2012 - 07.04.2012)

அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

செய்யும் வேலைகளை திறமையாகச் செய்யும் மேட ராசி அன்பர்களே..!


இந்தவார தொடக்கம் உங்களுக்கு மகிழ்ச்சியாகவே செல்லும். இல்லத்து விசேடங்களுக்கு செல்வீர்கள். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் கிடைக்கப்பெறுவீர்கள். இளைஞர்கள் விரும்பிய துறையில் பிரகாசிப்பார்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். கூட்டுத்தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் உண்டாகும். காரியங்கள் தங்கள் எண்ணம் போல் நிறைவேறும். புதிய பொருட்களை வாங்குவீர்கள். வார இறுதியில் சில சிக்கல்கள் உண்டாகும். நண்பர்களிடம் அளவோடு பழகுவது நல்லது. பண விடயத்தில் யாரையும் நம்பாமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட திகதி: 7
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா



கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தரும சாஸ்திரங்களில் நம்பிக்கை கொண்ட இடப ராசி அன்பர்களே..!


இந்தவாரம் எந்த ஒரு காரியத்தையும் தி;ட்டமிட்டு செய்வது அவசியம். பெற்றோரின் உடல் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. விற்பனை பிரதிநிதிகளுக்கு அலைச்சல் கூடும்.  பணத்தை முதலீடு செய்வதற்கு முன்னர் நன்கு யோசிப்பது நல்லது. பெரியவர்களிடம் பேசும்பொழுது மரியாதையுடன் நடப்பது அவசியம். வார இறுதியில் கடின உழைப்பால் விற்பனை அதிகரித்து லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். சுப செலவுகளை ஈடுகட்ட புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தொழிலில் லாபம் உண்டாகும். பணத்தட்டுப்பாடுகள் குறையும். 

அதிர்ஷ்ட திகதி: 3
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்



மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கடுமையான உழைப்பும் களைப்பில்லாத மனமும் பெற்ற மிதுன ராசி அன்பர்களே..!


பணவரவுகளில் பற்றாக்குறை ஏற்பட்டு சரியாகும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெறுவீர்கள். ஊதிய உயர்வுடன் பதவி உயர்வும் கிடைக்கும். அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கப்பெறுவீர்கள். தேவையில்லாமல் எந்த பிரச்சினையிலும் தலையிடாமல் இருப்பது நல்லது. புதிய நபர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. வயிற்றில் உபாதைகள் தோன்றி மறையும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. இந்தவாரம் உங்களுக்கு சிறுசிறு பிரச்சினைகள் இருந்தாலும் இந்தவாரம் நன்றாகவே செல்லும்.

அதிர்ஷ்ட திகதி: 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

உற்சாகத்துடன் செயல்களில் ஈடுபடும் கடக ராசி அன்பர்களே..!


இந்தவாரம் வியாபாரிகள், வாடிக்கையாளர்களிடம் முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது. கை, கால் மூட்டுகளில் வலி வந்து நீங்கும். மற்றவர்களின் உதவியை நம்பி எந்த செயலிலும் இறங்க வேண்டாம். ஆண் - பெண் நட்பில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது அவசியம். வார இறுதியில் உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிரமம் இருக்காது. குடும்பத்தில் அமைதியான போக்குகள் காணப்படும். எதிரிகள் தாங்களாகவே மன்னிப்பு கேட்பார்கள். ஆபரணங்கள் வாங்குவீர்கள். பணத்திற்கு குறைவிருக்காது. தொழிலில் ஏற்ற இறக்கம் காணப்படும். கவனமுடன் இருந்தால் சமாளித்து விடலாம்.

அதிர்ஷ்ட திகதி: 3
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்




மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

யாருக்காகவும் தனது கொள்கைகளை விட்டுக்கொடுக்காது பயமற்ற பேச்சும் செயலும் கொண்ட  சிம்மம் ராசி அன்பர்களே..!


இந்தவாரம் முயற்சி செய்யும் காரியங்கள் வெற்றியடையும். புதிய தொழில் தொடங்குவீர்கள்.  பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தாய் வழியில் வரவுகள் உண்டாகும். நீண்ட நாளைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். கணினி துறையை சேர்ந்தவர்களுக்கு சம்பள உயர்வுகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி செய்வோர் பெருத்த லாபம் பெற்று மனம் மகிழ்ச்சியடைவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சியாகவே செல்லும்.

அதிர்ஷ்ட திகதி: 5
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கம்பீரமான தோற்றத்திற்கு சொந்தக்காரரான கன்னி ராசி அன்பர்களே..!


இந்தவாரம் உத்தியோகஸ்தர்களுக்கு நிர்வாகப் பொறுப்புக்கள் அதிகமாகும். எதிர்பார்த்த செய்திகள் வர காலதாமதமாகும். மனக்கசப்புகள் தோன்றி மறையும். புதிய முதலீடுகளைத் தவிர்;ப்பது நல்லது. மன சங்கடங்களுக்கு மனதை ஆன்மீக வழியில் செலுத்துவீர்கள். வழக்குகள் இழுபறியாகவே காணப்படும். ஆனால் வார இறுதியில் நீண்ட நாளைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து முன்னேற்றம் அடைவீர்கள். தாய் வழியில் ஆதாயம் கிடைக்கப்பெறுவீர்கள். சுப காரியங்கள் நடைபெறும். வார இறுதி மகிழ்ச்சியாகவே செல்லும்.

அதிர்ஷ்ட திகதி: 2
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)




சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3ஆம் பாதங்கள்.

உயர்ந்த எண்ணங்கள் கொண்ட துலா ராசி அன்பர்களே..!


இந்தவார தொடக்கத்தில் பிறரிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்காமல் போகவே சில முக்கிய ஓர்டர்கள் கைநழுவிப்போகலாம். உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்கள் மனவேதனையைக் கொடுப்பார்கள். வியாபாரிகள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். எந்த சூழலிலும் உங்களுடைய பிரச்சினைகளை வெளிப்படுத்த வேண்டாம், புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. சில துக்கமான நிகழ்வுகளால் மனதில் கவலை காணப்படும். இருந்த போதிலும் மனம் தளராமல் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பணியில் இருப்பவர்கள் தங்களுக்கு மிகவும் உதவியாக இருப்பார்கள். தொழில் ரீதியாக மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். வார கடைசி மகிழ்;ச்சியாகவே செல்லும்.

அதிர்ஷ்ட திகதி: 2
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)




விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

ஜோதிடத்தில் அதிக ஈடுபாடு காட்டும் விருட்சிக ராசி அன்பர்களே..!


வியாபார ரகசியங்களை வெளியிடாமல் இருப்பது நல்லது. பங்குச்சந்தைகளில் சுமாரான போக்கே காணப்படும். பெண்களுக்கு தன்னம்பிக்கையும் மனதைரியமும் மிகும். திட்டமிட்டபடி செயல்பட்டால் வருமானத்தை அள்ளலாம். குடும்பத்தில் அன்பு மேலோங்கும். விளையாட்டுக்களில் அதிகம் ஆர்வம் காணப்படும். மனதிற்கு பிடித்தமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடும் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும். கலைஞர்களுக்கு பெரிய வாய்ப்புகள் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். இடமாற்றம் மூலம் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திகதி: 1
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி




மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

உயர்ந்த சிந்தனையும் எழுத்தாற்றலும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே..!


பிரயாணங்கள் லாபம் உடையதாய் இருக்கும். பணத்தட்டுப்பாடுகள் தோன்றி மறையும். எதிர்பார்த்த செய்திகள் வர காலதாமதமாகும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும்.  அரசாங்கத்தினரால் ஆதாயம் காணப்படும். மனமகிழ்ச்சி உண்டாகும். இல்லத்தில் ஆபரண சேர்க்கை உண்டாகும். கூட்டுத்தொழிலில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். முக்கிய பணிக்காக தங்கள் சேமிப்புகள் குறையும். கலைஞர்களுக்கு சக கலைஞர்கள் மூலம் வாய்ப்புக்கள் கூடி வரும். இந்த வாரம் மகிழ்ச்சியாகவே இருக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 3
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்


சந்திராஷ்டமம்
மார்ச் 31ஆம் திகதி காலை 02.44 மணியிலிருந்து ஏப்ரல் 03ஆம் திகதி காலை 08.53 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தர்மம் செய்வதில் அதிக ஈடுபாடு கொண்;ட மகர ராசி அன்பர்களே..!


இந்தவாரம் உங்களுக்கு இடமாற்றத்தினால் சில தோல்விகள் உண்டாகும். பணியில் மன வேதனைகள் காணப்படும். பண விடயங்களில் யாரையும் நம்ப வேண்டாம். குடும்பத்தில் பழைய கடன் தொல்லைகளால் சில பிரச்சினைகள் உண்டாகும். செலவுகளைக் குறைக்க ஆலோசனை செய்வீர்கள். அரசாங்க காரியங்கள் இழுத்துக்கொண்டே இருக்கும். பெண்கள் பணியில் கவனத்துடன் இருப்பது அவசியம். இவ்வளவு சிரமங்கள் இருந்த போதிலும் வார இறுதி உங்களுக்கு மகிழ்ச்சியாகவே செல்லும். பூர்வீக சொத்து பிரச்சினைகள் தீரும். பிற இன மக்கள் தங்களுக்கு உதவுவார்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் அன்பு மேலோங்கும்.

அதிர்ஷ்ட திகதி: 3
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்


சந்திராஷ்டமம்
ஏப்ரல் 03ஆம் திகதி காலை 08.53 மணியிலிருந்து ஏப்ரல் 05ஆம் திகதி காலை 11.10 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கலைகளில் அதிக ஈடுபாடு காட்டும்; கும்ப ராசி அன்பர்களே..!


இந்தவாரம் இல்லத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டாகும்;. தொழிலில் அதிக அளவில் ஆர்வம் காணப்படும். சில சமயம் பணத்தட்டுப்பாடுகள் வந்து நீங்கும். பண வரவில் மனம் மகிழ்ச்சியடைவீர்கள். எதிரிகள் தானாகவே அழிந்து விடுவார்கள். புதிய தகவல்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கும்;. இருந்த போதிலும் வார இறுதியில் குடும்பத்தில் சிறு சிறு சலசலப்புக்கள் நீங்கும். பயணங்கள் அலைச்சல் உடையதாகவே அமையும். யாரையும் நம்பாமல் இருப்பது நல்லது. தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். பணியாளர்களிடத்தில் முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட திகதி: 7 
அதிர்ஷ்ட நிறம்: கருப்பு தவிர
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா


சந்திராஷ்டமம்
ஏப்ரல் 05ஆம் திகதி மாலை 11.31 மணியிலிருந்து ஏப்ரல் 07ஆம் திகதி காலை 11.09 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9- பாதங்கள்.

எல்லோரிடமும் நேர்மையுடன் பழகும் மீன ராசி அன்பர்களே..!


இந்தவாரம் உங்களுக்கு பணியில் பிரச்சினைகள் உண்டாகும். பிற இனத்தவரால் துன்பம் அடைய நேரிடலாம். விட்டுக்கொடுப்பதன் மூலம் சிக்கல்களைத் தவிர்க்கலாம். திருட்டு பயம் உண்டாகும், எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும். வேண்டாத பேச்சுக்களால் வீண் மனஸ்தாபங்கள் உண்டாகும். ஆனால் வார இறுதியில் மேலதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். புதிய வாகனங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாளைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பொது வாழ்வில் உள்ளவர்கள் மக்களிடம் நற்பெயர் பெறுவீர்கள். கூட்டுத் தொழில் சீராக செல்லும். பிரிந்த உறவுகள் ஒன்று கூடும். உறவுகள் பலப்படும்.

அதிர்ஷ்ட திகதி: 4
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .