2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இந்தவார பலன்கள் (11.03.2012 - 17.03.2012)

A.P.Mathan   / 2012 மார்ச் 10 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தவார பலன்கள் (11.03.2012 - 17.03.2012)


மேடம்
அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
தன்னை சார்ந்தவர்களுடன் ஒழிவு மறைவின்றி பழகும் வெண்மையான உள்ளம் கொண்ட மேட ராசி அன்பர்களே..!
இந்தவாரம் உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். வியாபாரம் சம்மந்தமாக வெளியூர் செல்லும் சூழ்நிலை உருவாகும். தனலாபம் ஏற்படும். மேலும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேட்டி காணுதல், காரியத்தில் சாதனைகளை அடைதல், வெளிநாட்டில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். உடலில் உஷ்ணம் ஏற்பட்டு காய்ச்சல், தலைவலி ஆகியவை உண்டாகும். மேலும் வேண்டாத உணவால் வயிற்றில் பிரச்சினைகள் உண்டாகும். வார இறுதியில் செலவுகள் அதிகரிக்கும். பிறரிடம் உதவியை எதிர்பார்க்கும் சூழ்நிலை உருவாகலாம். வீண் மனஸ்தாபங்கள் உண்டாகும். புதிய வேலைத் திட்டங்களை தவிர்ப்பது நன்மையை தரும்.  மனதளவில் குழப்;பங்கள் தோன்றும்.
அதிர்ஷ்ட திகதி: 15
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்

சந்திராஷ்டமம்
மார்ச் 13ஆம் திகதி மாலை 2.12 மணியிலிருந்து மார்ச் 14ஆம் திகதி காலை 05.14 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்ச்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



இடபம்
கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
தமது வாக்கு சாதுர்யத்தாலும் இனிய சுபாவத்தினாலும் வாழ்வில் வெற்றியை பெற்றுக்கொள்ளும் இடப ராசி அன்பர்களே..!
இந்தவாரம் குடும்பத்தில் அலைச்சல்கள் காணப்படும். பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது கவனம் தேவை. உற்சாகமான சூழ்நிலை காணப்படும். அரசினரால் ஆதாயம் கிடைக்கும். மகிழ்ச்சியுடன் உல்லாச பயணங்கள் சென்று வரலாம். நல்ல காரியங்கள் செய்வதற்கு வழி வகைகள் ஏற்படும். நல்லவர்களின் சேர்க்கை உண்டாகும். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த  செய்திகள் வந்து சேரும். மகிழ்ச்சியான செய்தி மற்றும் வியாபாரத்தில் புதிய தொடர்புகள் ஏற்பட்டு வியாபாரம் விருத்தியடையும். தனலாபம் உண்டாகும்;. முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். வியாபாரத்தில் புதிய உக்திகளை செலுத்துவீர்கள். மகிழ்ச்சியான வாரம் இது.
அதிர்ஷ்ட திகதி: 11
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)

சந்திராஷ்டமம்
மார்ச் 14ஆம் திகதி காலை 5.14 மணியிலிருந்து மார்ச் 17ஆம் திகதி காலை 10.35 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்ச்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



மிதுனம்
மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
வலிமையான உள்ளமும் செயல்களில் சுறுசுறுப்பும் கொண்ட மிதுனம் ராசி அன்பர்களே..!
இந்தவாரம் நல்லவர்களின் சேர்க்கை, சகோதரர் சகோதரிகளின் வருகை, இதனால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வரும். வியாபாரம் சம்மந்தமாக வெளியூர் செல்லும் சூழ்நிலை உருவாகலாம். மேலும் வீண் செலவுகள் உண்டாகும். சாப்பாட்டில் வெறுப்பு உண்டாகும். இதனால் உடல் நலம் பாதிப்படையும் சூழ்நிலை உருவாகலாம். எனவே கவனத்துடன் இருப்பது அவசியம். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே அன்யோன்யம் பலப்படும். நிறைவான உணவு, உறக்கம் ஆகியவை இனிதே கிடைக்கும். பெண்களுடன் விவாதங்கள் ஏற்பட்டு வீணான பிரச்சினைகள் உண்டாகும்.  துன்பங்களை அடைய நேரிடும். மனதளவில் குழப்பம் உண்டாகும். உடல் சோர்வு, மயக்கம், பதற்றநிலை ஆகியவை காணப்படும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.
அதிர்ஷ்ட திகதி: 10
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி



கடகம்
புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.
மென்மையான சுபாவமும் எல்லோருடனும் எளிமையாக பழகும் உள்ளமும் கொண்ட கடக ராசி அன்பர்களே..!
இந்தவாரம் உங்களுக்கு நல்ல காரியங்கள் செய்வதற்கு வழி வகைகள் கிடைக்கும். மற்றும் நல்லவர்கள் பழக்கவழக்கங்கள் கிடைக்கும். மேலும் வியாபார நிலையில் முன்னேற்றம் அடைவீர்கள். ஊக்கமடைவீர்கள். வெளிநாட்டில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். வியாபாரம் சம்மந்தமாக நீண்டதூர பிரயாணத்தை மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகலாம். இதனால் வியாபாரம் விருத்தியடைந்து பணவரவு அதிகரிக்கும். இருந்தாலும் மனதில்  குழப்பமான சூழ்நிலையே காணப்படும். அனாவசிய பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இதனால் வீணான பிரச்சினைகள் உண்டாகும். மேலும் செய்யும் செயல்களில் சிறுசிறு தவறுகள் காணப்படும்.
அதிர்ஷ்ட திகதி: 11
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)



சிம்மம்
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
யாருக்காகவும் தனது கொள்கைகளை விட்டுக்கொடுக்காது பயமற்ற பேச்சும் செயலும் கொண்ட  சிம்ம ராசி அன்பர்களே..!
இந்தவாரம் உங்களுக்கு பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைகளில் ஈடுபடும் நிலை உருவாகும். மற்றும் பெண்களால் மகிழ்ச்சி ஏற்படும். உயர் அதிகாரிகளை சந்தித்து பேட்டி காணும் சூழ்நிலை உருவாகலாம். தீய நட்பினால் நஷ்டங்கள் உண்டாகும், இதனால் குடும்பத்தில் சிறு சிறு சிக்கல்கள் ஏற்படும். முயற்ச்சிகள் தடைப்படும். பெண்களுடன் விவாதங்கள் நடைபெறும். மற்றவர்களினால் பிரச்சினைகள் ஏற்படலாம். துன்பப்படும் சூழ்நிலை உருவாகலாம். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். முயற்சி செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். வியாபாரத்தில் அதிக பணலாபம் உண்டாகும். வெளியூர் செல்லும் சூழ்நிலைகள் உருவாகலாம். இதனால் அலைச்சல் தோன்றி மறையும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.
அதிர்ஷ்ட திகதி: 10
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)



கன்னி
உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
தான் செய்யும் எந்த காரியத்திலும் வாய்மையும் முன்னுரிமையும் பெற எண்ணும் கன்னி ராசி அன்பர்களே..!
இந்தவாரம் உங்களுக்கு நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகள் கிடைக்கும். நல்லவர்களுடைய சேர்க்கை மகிழ்ச்சியைக் கொடுக்கும். தனலாபங்கள் உண்டாகும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வரும். தனலாபங்கள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் ஏற்படும். மனம் இனிமையான இசையை விரும்பும். மற்றும் பணிபுரியும் இடத்தில் அதிகாரிகளுடன் பிரச்சினை ஏற்படும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும். தீயவர்களின் நட்பு ஏற்படும்,  இதனால் வியாபாரத்தில் நஷ்டம் உண்டாகும். சிலவிதமான சிக்கல்கள் உருவாகும். வீட்டில் களவு போகும் சூழ்நிலை உருவாகும், இதனால் மனதில் பயம் தோன்றும். வீண் அலைச்சல்கள் உண்டாகும், மனம் சஞ்சலமடையும். இக்காலகட்டங்களில் புண்ணிய ஸ்தலங்கள் சென்று பிரார்த்தனைகளில் ஈடுபடுவது அவசியம்.
அதிர்ஷ்ட திகதி: 17
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி



துலாம்
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3ஆம் பாதங்கள்.
தேடி சென்று உதவிடும் குணமும் முடிவுகளை பாராது முன்னேற்றத்திற்காக முழு மூச்சாக செயல்படும் துலா ராசி அன்பர்களே..!
இந்தவாரம் உங்களுக்கு பல வகையில் சிக்கல்கள் ஏற்பட்டு நீங்கும். வெளிநாட்டில் இருந்து மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். இல்லையெனில் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். மனதில் குழப்பங்கள் தோன்றும், அரசினரால் ஆதாயங்கள் கிடைக்கும். காரியத்தில் வெற்றி உண்டாகும். மற்றவர்களினால் பிரச்சினை உண்டாகும். வேண்டாத செலவுகளால் வேதனையடைய நேரிடும். மற்றும் வேண்டாத பேச்சுக்களால் பிரச்சினைகள் உண்டாகும். இக்காலகட்டங்களில் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள் தோல்விகளை புத்திசாலித்தனமாக வெற்றிகொள்ளலாம்.
அதிர்ஷ்ட திகதி: 17
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி



விருட்ச்சிகம்
விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.
ஆர்வத்துடன் சாதனைகள் படைக்கும் குணமுடையவர்களே, எடுத்த காரியத்தை முடிக்கக்கூடிய ஆற்றல் பெற்ற விருட்சிக ராசி அன்பர்களே..!
இந்தவாரம் நீங்கள் வாழ்க்கையில் முன்மாதிரியாக விளங்கும் பெரியோர்களை கண்டு ஆசீர்வாதம் பெற வாய்ப்பு கிடைக்கும். அழகிய ஆடை, ஆபரணங்கள் சேருதல். வியாபாரம் சம்மந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். இதனால் வியாபாரம் விருத்தியடைந்து லாபம் உண்டாகும். சுவையான உணவு உண்ணுதல், பெண்களால் மகிழ்ச்சி உண்டாகும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். மற்றும் வீணான அலைச்சல்கள் உண்டாகும். காரியத்தில் தடைகள் காணப்படும். மேலும் பணத்திற்கு பிரச்சினைகள் உண்டாகும், இதனால் அலைச்சல்கள் உண்டாகும். பிறர் உதவியை எதிர்நோக்கும் சூழ்நிலை உருவாகலாம். எனவே பண விடயத்தில் கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.
அதிர்ஷ்ட திகதி: 14 
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா



தனுசு
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
அனைவரிடமும் அன்பு காட்டும் உள்ளமும் தீமைகளை கண்டு விலகி செல்லும் பக்குவமும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே..!
இந்தவாரம் உங்களுக்கு வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். உடலில் காய்ச்சல், தலைவலி போன்றவை ஏற்படும். செலவுகள் அதிகரிக்கும் நிலை உருவாகலாம். வேண்டாத பேச்சுகளால் மனஸ்தாபம், திருட்டுப் பயம் உண்டாகும். மேலும் வீண் அலைச்சல் காணப்படும். இதனால் மனதில் குழப்பமான சூழ்நிலை உருவாகும். பிறரின் பேச்சை கேட்டு தேவையற்ற பிரச்சினைகளில் முன் நிற்;பதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிப்பதுடன் பல வாய்ப்புக்கள் பின்தள்ளப்படும். வார இறுதியில் மகிழ்ச்சியான செய்தி மற்றும் வியாபாரத்தில் புதிய தொடர்புகள் ஏற்பட்டு வியாபாரம் விருத்தியடையும், தனலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திகதி: 11
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)



மகரம்
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதில் இறைவனுக்கு முதலிடம் அளிக்கும் மகர ராசி அன்பர்களே..!
இந்தவாரம் உங்களுக்கு வெளியூரிலிருந்து செய்திகள் வரும். இதனால் பணப் பிரச்சினைகள்  உருவாகும். முயற்ச்சியில் தோல்விகள் காணப்படும். துக்கமான நிகழ்வுகள் உண்டாகும். வீண் அலைச்சல் காணப்படும். செயல்களில் தவறுகள் நிகழும். அனாவசியமான செலவுகள் காணப்படும். உண்ணும் உணவில் வெறுப்பு உண்டாகும். உடல் நலம் பாதிக்கப்படும். ஆனாலும் வார இறுதியில் உடன் பிறந்தவர்களுடைய வருகையினால் மகிழ்ச்சி நிலவும். அரசினரால் ஆதாயம் கிடைக்கும். மேலும் பிரச்சினைகள், தோல்விகளை கவனத்துடன் இருந்தால் புத்திசாலித்தனமாக வெற்றிகொள்ளலாம். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும். 
அதிர்ஷ்ட திகதி: 11
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)



கும்பம்
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
எதற்கும் தளராத நெஞ்சமும் ஆடம்பரம் இன்றி வாழ விரும்பும் கும்ப ராசி அன்பர்களே..!
இந்தவாரம் உங்களுக்கு உடல் நிலையில் சோர்வு காணப்படும். மனதில் குழப்பமான சூழல்கள் உருவாகும். குடும்பத்தில் உள்ள பெண்களுடன் விவாதங்கள் உண்டாகும். எனவே வாய் வார்த்தைகளில் நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியமாகும். சாதுக்களின் நேரிடையான தரிசனங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். இதனால் மனம் அமைதியடையும். ஆனாலும் முயற்சியில் தோல்விகளே காணப்படும். துக்கம் உண்டாகும். வீண் அலைச்சல் உண்டாகும். சிலரிடையே மனஸ்தாபங்கள் தோன்றும். திருட்டு போகும் சூழ்நிலை உருவாகலாம். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும். பிரயாணங்கள் மேற்கொள்ளும் பொழுது கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.
அதிர்ஷ்ட திகதி: 15
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்



மீனம்
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.
தனக்கென்று மட்டும் எண்ணாது பிறரின் நலனுக்காக செயல்படும் பரந்த உள்ளம் கொண்ட மீனம் ராசி அன்பர்களே..!
இந்தவாரம் உங்களுக்கு செய்யும் செயல்களில் சிறுசிறு தவறுகள் ஏற்படும். முயற்சியில் தோல்வியான நிலை உண்டாகும். இதனால் மனதில் துக்கம் காணப்படும். இக்காலகட்டங்களில் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் தோல்விகளை புத்திசாலித்தனமாக  வெற்றிகொள்ளலாம். வியாபாரம் சம்மந்தமாக வெளியூர் செல்லும் சூழ்நிலை உருவாகலாம். இதனால் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் பல அரிய நுட்;பங்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். இதனால் பணவரவுகள் அதிகரிக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்த செய்திகள் கிடைக்கும். காணாமல் போன பொருள் மீண்டும் கிடைக்கும். மனம் மகிழ்ச்சியடையும்.
அதிர்ஷ்ட திகதி: 12
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்

சந்திராஷ்டமம்
மார்ச் 11ஆம் திகதி காலை 1.01 மணியிலிருந்து மார்ச் 13ஆம் திகதி மாலை 02.12 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்ச்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .