2024 மே 07, செவ்வாய்க்கிழமை

இந்தவார பலன்கள் (15.05.2011 - 21.05.2011)

A.P.Mathan   / 2011 மே 14 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தவார பலன்கள் (15.05.2011 - 21.05.2011)


அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

கள்ளம், கபடம் இல்லாத உள்ளம் பெற்ற, எதிலும் விடாமுயற்சியுடன் செயல்படும் மேட ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு நீண்ட நாள் தாமதமான காரியங்கள் விரைவில் நற்பலனை தரும். பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்ப உறவினர்களுடன் வெளிப் பிரயாணங்கள் சென்று வருவீர்கள். மனதுக்கு நிறைவு தரும் நல்ல செய்திகள் கிடைக்கும். விநோத விளையாட்டுக்களில் மகிழ்ச்சியுடன் ஈடுபடலாம். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கக்கூடும். முயற்சியுடன் செய்யும் பணிகளில் அதிக லாபம் ஏற்படும். வியாபாரத்தில் நவீன தொடர்புகள் தேடி வருவதுடன் மேல் அதிகாரிகளின் அனுசரணை பக்கபலமாக அமையும். இக்காலகட்டங்களில் நன்மையான செயல்களினால் மனதுக்கு திருப்தியும் அமைதியும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 15
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்


சந்திராஷ்டமம்
மே 17ஆம் திகதி மாலை 12.50 மணியிலிருந்து மே 19ஆம் திகதி மாலை 03.09 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்களை மேற்கொள்ளுதல், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினைகளை முன்னிட்டு வாதிடுவதையும் ஈடுபடுவதையும் கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வணங்கி வர வேண்டும்.



கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

முன்கோபம் அதிகம் கொண்ட, மற்றவர்களை எளிதில் நம்பாத இடப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு வியாபாரத்தை மென்மேலும் வளர்ச்சியடைய பல அரிய நுட்பங்களை கையாண்டு வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். சிலரின் எதிர்பாராத உதவிகள் கிடைக்கக்கூடும். இசையில் நாட்டம் அதிகரிக்கும், காணாமல் போன பொருள் மீண்டும் கிடைக்கும். கேட்ப்பார் பேச்சை கேட்டு நடப்பதால் சிலவிதமான பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும். குடும்பத்தில் பெண்கள் நிதானமாகவும் அனுசரிப்புடனும் செயல்படுவார்கள். நண்பர்களுடன் சேர்ந்து உல்லாச பயணங்கள் செல்லும்போது மிக கவனம் தேவை. இக்காலகட்டங்களில் பெரியார்களின் உதவிகள் நல்வழிநடத்தலை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திகதி: 20
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)


சந்திராஷ்டமம்
மே 19ஆம் திகதி மாலை 03.09 மணியிலிருந்து மே 21ஆம் திகதி மாலை 08.40 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்களை மேற்கொள்ளுதல், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினைகளை முன்னிட்டு வாதிடுவதையும் ஈடுபடுவதையும் கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வணங்கி வர வேண்டும்.



மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

பிறரின் துன்ப நேரங்களில் கருணை உள்ளத்தோடு கரம் கொடுக்கும் மிதுன ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு சிலவிதமான சிக்கல்கள், கவலை தோன்றி மறையும். புதிய முயற்சிகளை முன்னெடுப்பதனால் அனுகூலம். பணவரவுகள் எதிர்பார்த்தபடி அமையாது, அரசாங்க அதிகாரிகளின் உதவியுடன் நல்ல தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளலாம். பெண்களுடன் கோபத்தில் பேசுவதனால் அது மனகசப்பை ஏற்படுத்தும். சொல்கட்டுப்பாடு தேவை. நிம்மதியான தூக்கம் மனதுக்கு உற்சாகத்தை தரும். தீய நண்பர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பதை தவிர்க்கவும். குடும்பத்தாருடன் இறைவழிபாடுகளில் ஈடுபடுவதனால் நன்மை ஏற்படும். இக்காலகட்டங்களில் வாழ்க்கையில் பல நல்ல விடயங்களை கற்று உணர்ந்து வாழ்வது சிறந்ததாகும்.

அதிர்ஷ்ட திகதி: 16
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி




புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

சிறிய விடயத்தையும் பெரிய அளவில் கற்பனை செய்யும் சுபாவும் அமைதியாக செயல்படும் கடக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் உண்டாகும். நன்மையான காரியங்களில் அதிக நாட்டம் காட்டுவீர்கள். தொழில் அல்லது பணி மாற்றங்களுக்கு இடமுண்டு. நண்பர்களுடன் ஒன்றிணைந்து புதிய வியாபாரம் தொடர்பான திட்டங்களை மேம்படுத்தல். வெண்மையான ஆடைகளை அணியலாம். அறுசுவையான உணவுகள் கிடைக்கும். பெண்களுடன் தேவையற்ற பிரச்சினைகளை முன்னிட்டு பேசுவதை தவிர்க்கவும். பணப் பிரச்சினைகள் அலைச்சலை ஏற்படுத்தக் கூடும். பணம் சேமிப்பதில்; அதிக கண்ணோட்டம் தேவை. இக்காலகட்டங்களில் ஆன்மீக சிந்தனைகள் தியானங்களில் அதிக அக்கறை செலுத்தவும்.

அதிர்ஷ்ட திகதி: 21
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

சிறிய விடயத்தையும் பெரிய அளவில் கற்பனை செய்யும் சுபாபமும் அமைதியாக செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு நவீன வேலை வாய்ப்புக்கள் தேடிவரக்கூடும். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரும். குடும்பத்தில் சுப விசேஷங்களின் போது பெண்கள் முன்னின்று செயல்படுவார்கள். நெருங்கிய நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். அரசாங்க ஊழியர்களின் சேவைகள், உதவிகள் கிடைக்கக் கூடும். வெளிதேச பயணங்கள் அலைச்சலை ஏற்படுத்தினாலும் பயனுள்ளதாக அமையும். நல்ல செய்திகளை கேள்விப்படுவீர்கள். திருடர்களிடம் மிக கவனத்துடன் இருப்பது நன்று. இக்காலகட்டங்களில் மனதில் தேவையற்ற குழப்பங்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 21
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)




உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

யாரிடமும் எளிதில் பழகாத, பழகியவர்களை எச்சந்தர்பத்திலும் மறவாத உள்ளம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே..!

இந்தவாரம் நீங்கள் அன்றாட வேலைகளை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பொழுதுபோக்குகளுக்காக அதிக செலவு செய்ய நேரிடும். மனதில் பதற்றங்களும் செயல்களில் தவறுகளும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் சுற்றத்தின் நண்பர்களின் வருகை குதூகலத்தை ஏற்படுத்தும். தொழில் சம்பந்தமான பிரயாணங்களை மேற்கொள்ளுதல். நண்பர்களின் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். திருடர்களிடம் மிக கவனத்துடன் இருப்பது நன்று. வியாபாரம் தொடர்பான வேலை முயற்சிகளை முன்னெடுப்பதால் நன்மை. இக்காலகட்டங்களில் புண்ணிய ஸ்தலங்கள் சென்று பிரார்த்தனைகளில் ஈடுபடுவது அவசியம்.

அதிர்ஷ்ட திகதி: 18
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ் இசிவப்பு
அதிஷ்ட தெய்வம்: பார்வதி



சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

வாழ்க்கையில் யாருக்கும் இடையூறின்றி சுற்றி திரியும் பறவைகளை போல் சுதந்திரமாக வாழ விரும்பும் துலாம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு உற்சாகத்துடன் புதிய காரியங்களில் ஈடுபடலாம். பகைவர்களினால் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. வார்த்தைகளில் நிதானம் தேவை. வாகன சாரதிகளுக்கு தூர பிரயாணங்களினால் அதிக லாபம். நல்ல நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தாருடன் நல்ல காரியங்களில் ஈடுபடுவதால் அனுகூலம். பிறரின் பேச்சைக்கேட்டு தேவையற்ற பிரச்சினைகளில் முன்னிற்பதை தவிர்க்கவும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிப்பதுடன் பல வாய்ப்புக்கள் பின்தள்ளப்படக் கூடும். கடின உழைப்பினால் மட்டும் வெற்றி அடையலாம். இக்காலகட்டங்களில் எந்த விடயத்திலும் நிதானத்துடன் கையாளவும்.

அதிர்ஷ்ட திகதி: 18
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி




விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

எப்பொழுதும் வெகுளியாக பேசும் குணமும் யாரிடமும் எதையும் எதிர்பாராத தன்மையும் கொண்ட விருட்சிக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு சிக்கனமற்ற செலவுகளை மேற்கொள்வதனால் பணப் பிரச்சினைகள் ஏற்படும். அரசாங்க ஊழியர்களின் உதவியுடன் புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மனதில் சிறு பயங்கள், சங்கடங்கள் தோன்றி மறையும். ஒவ்வாத உணவினால் அஜீரண கோளாறுகள் ஏற்படும். நலனை பாதுகாக்கவும். பெண்களை அனுசரித்து நடப்பதால் நன்மதிப்பை பெறலாம். சிலர் தமது பணிகளை அக்கறையுடன் செய்து திருப்தி அடைவார்கள். அனாவசிய ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. இக்காலகட்டங்களில் நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக செய்து முடிக்கக் கூடியதாயிருக்கும்;.

அதிர்ஷ்ட திகதி: 20
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)




விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

எல்லோரிடமும் பண்பாக பேசும் குணமும் பிறரை அனுசரித்து நடந்துகொள்ளும் தனுசு ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு நல்ல செய்திகள் உடனுக்குடன் வந்து சேரும். விநோத விளையாட்டுகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். அறுசுவையான உணவுகளை உண்ணலாம். நண்பர்களுடன் சேர்ந்து புதிய வேலை திட்டங்களை மேற்கொள்ளலாம். புதுமையான பொருள் காணக்கிடைத்தல். திருடர்களிடம் மிக கவனத்துடன் இருப்பது நல்லது. பெண்களுக்கு அழகிய ஆடை, அணிகலன்கள் சேர்க்கை உண்டாகும். பிறரின் பேச்சை கேட்டு நடப்பதால் பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும். தொழில் சம்பந்தமான இடமாற்றங்கள் அமையக்கூடும். இக்காலகட்டங்களில் எந்த காரியத்தையும் தனித்து நின்று செயல்படுவதனால் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திகதி: 20
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)




உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கவலைகளை மறந்து களிப்புமிகு முகத்துடன் கனிவாகப் பேசும் மகர ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு குடும்பத்தில் சுபகாரியங்களின் போது சொந்த பந்தங்களின் அன்பு அக்கறை அதிகரிக்கும். நெருங்கிய நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிட்டும். வியாபார உத்தியோகத்தர்கள் தொழில் விரித்திக்காக பல புதிய நுட்பங்களை கையாளுதல். பிறரின் மூலம் தகவல் வந்து சேரும். ஆன்மீக தியானங்கள், யாத்திரைகளை மேற்கொள்ளும்போது மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிட்டும். பணப் பிரச்சினைகள் அலைச்சலையும் சங்கடத்தையும் ஏற்படுத்தக் கூடும், ஆகவே பணம் சேமிப்பதில் கடின உழைப்பு அவசியம். இக்காலகட்டங்களில் இறைவனுக்கு உகந்த பக்தர்களாக வாழ்வதனால் மனதில் நம்பிக்கையும் தைரியமும் ஏற்படும்.

அதிர்ஷ்ட திகதி: 20
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)




அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

உறுதிமிக்க எண்ணங்களும் கம்பீரமான தோற்றமும் கொண்ட கும்ப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு மனதில் உள்ள தேவையற்ற குழப்பங்கள் நீங்குவதுடன் அன்றைய பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். பகைவர்களின் பேச்சைக்கேட்டு அனாவசிய பிரச்சினைகளில் சிக்கி கொள்ளாது சுயசிந்தனையுடன் செயல்படவும். குடும்பத்தில் சுபகாரியங்களின் போது பெண்களின் உதவிகள் கிடைக்கும். நிம்மதியான தூக்கம் இனிதே கிடைக்கும். வாகன சாரதிகளுக்கு தூர பிரயாணங்களினால் அதிக லாபத்தை பெற்றுக்கொள்ளலாம். விநோத விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். சாப்பாட்டில் விருப்பமின்மை ஏற்படும், இதனால் உடல் ஆரோக்கியம் பாதிப்படைதல். இக்காலகட்டங்களில் நமது நலனை நாம் அக்கறையுடன் பாதுகாப்பதால் நோயற்ற வாழ்க்கை வாழலாம்.

அதிர்ஷ்ட திகதி: 15
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9- பாதங்கள்.

எதிலும் கலை நுணுக்கத்துடன் காரியங்களை செய்யும் மீனம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரம்பத்தில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றமும் லாபமும் காணப்படும். குடும்பத்தாருடன் ஆலய அனுஷ்டானங்கள் சென்று வருவதனால் நன்மைகள் உண்டாகும். வரவுகள் குறைந்து செலவுகள் அதிகரிக்கக்கூடும். இதனால் பணப் பிரச்சினைகள் ஏற்படும். சிலர் தமது ஆற்றலினால் புதிய சாதனைகளை மேம்படுத்தல். உயர் அதிகாரிகளுடன் சுமுகமான முறையில் செயல்படவும். பெண்களின் உதவிகள் கிடைக்கக் கூடும். இக்காலகட்டங்களில் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள் தோல்விகளை புத்திசாலித்தனமாக வெற்றிகொள்ளலாம்.

அதிர்ஷ்ட திகதி: 17
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: (நவகிரகம்)


சந்திராஷ்டமம்
மே 15ஆம் திகதி மாலை 12.10 மணியிலிருந்து மே 17ஆம் திகதி மாலை 12.50 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்களை மேற்கொள்ளுதல், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினைகளை முன்னிட்டு வாதிடுவதையும் ஈடுபடுவதையும் கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வணங்கி வர வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X