2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இந்தவார பலன்கள் (29.01.2012 - 04.02.2012)

A.P.Mathan   / 2012 ஜனவரி 28 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தவா ரபலன்கள் (29.01.2012 - 04.02.2012)

அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

தன்னை சார்ந்தவர்களுடன் ஒழிவு மறைவின்றி பழகும் வெண்மையான உள்ளம் கொண்ட மேட ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். புத்தாடைகளை அணிவதன் மூலம் மனது மற்றும் உடலில் உற்சாகம் பிறக்கும். நல்ல காரியங்கள் செய்வதற்கு வழி வகைகள் பிறக்கும். ஆனாலும் மனதில் குழப்பமான சூழ்நிலைகளே நிலவும். தொழில் சம்பந்தமாக வெளியூர் செல்லும் சூழ்நிலைகள் உருவாகலாம். இதனால் உடலில் மயக்கம் மற்றும் பலவகையான சிரமங்கள் காணப்படும். வீட்டில் திருடர்களினால் பயம் உண்டாகும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும். வார இறுதியில் பண விடயத்தில் கவனத்துடன் இருக்கவும். ஏனெனில் பணத்திற்கு தட்டுப்பாடுகள் காணப்படும். தொழில் விடயத்தில் ஆர்வம் காணப்படும்.

அதிர்ஷ்ட திகதி: 4
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்




கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தமது வாக்கு சாதுர்யத்தாலும் இனிய சுபாவத்தினாலும் வாழ்வில் வெற்றியை பெற்றுக்கொள்ளும் இடப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு உறவினர்களிடையே அன்யோன்யம் கூடும், உறவுகள் பலப்படும். வெளிநாட்டில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். மேலதிகாரிகளின் மூலம் நன்மைகளை கிடைக்கப்பெறுவீர்கள். செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியைத் தழுவும்.  அனாவசிய பேச்சுக்களால் பிரச்சினைகள் மற்றும் வீண் அலைச்சல் உண்டாகும். பிறருடைய உதவியை எதிர்பார்த்து கிடைக்காமல் போகலாம். இதனால் வீண் மனஸ்தாபங்கள் காணப்படும்,  உடலில் உஷ்ணம் அதிகம் உண்டாகி காய்ச்சல், தலைவலி ஆகியவை காணப்படும். எனவே உடல் ஆரோக்கியம் சம்பந்தமான விடயத்தில் கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.

அதிர்ஷ்ட திகதி: 3
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுதுணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்



மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

வலிமையான உள்ளமும் செயல்களில் சுறுசுறுப்பும் கொண்ட மிதுனம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு அரசாங்க காரியங்கள் அனைத்தும் அனுகூலமாக முடியும். அரசினரால் தனலாபங்கள் ஆகியவைகள் கிடைக்கப்பெறுவீர்கள். பல புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். இசையில் ஆர்வம் காணப்படும். அதனால் மகிழ்ச்சி ஏற்படும். இருந்தாலும் மனதளவில் கஷ்டங்கள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் ஏற்படும், இதனால் மகிழ்ச்சி உண்டாகும்;. பெண்களுடன் பிறரின் பிரச்சினைகளை முன்னிட்டு பேசுவதை தவிர்க்கவும். போட்டிகளும் காணப்படும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும். இல்லையெனில் பெரிய அளவில் நஷ்டங்களை சந்திக்க நேரிடும். அதனால் மனதில் குழப்பங்கள் தோன்றி மறையும்.

அதிஷ்ட திகதி: 31   
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

மென்மையான சுபாவமும் எல்லோருடனும் எளிமையாக பழகும் உள்ளமும் கொண்ட கடக ராசி அன்பர்களே..!

இந்தவாரம்; பெண்களிடமிருந்து உதவிகள் கிடைக்கும். தொட்டது துலங்கும் காலம் இது. எனவே முயற்சி செய்தால் காரியங்கள் அனைத்திலும் வெற்றியடையலாம். செய்யும் தொழிலில் மிகுந்த ஈடுபாட்டுடன் காணப்படுவீர்கள். வெளிநாட்டில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். உடல் மற்றும் மனதில் சோர்வு காணப்படும். இசையில் ஆர்வம் செலுத்தி உடல் மற்றும் மனதை  அமைதியுடன் வைத்து இருப்பீர்கள். வெளியூர் செல்லும் சூழ்நிலை உருவாகலாம். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். இதனால் அதிக அளவில் லாபம் காணப்படும். மகிழ்சியான செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திகதி: 30
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி




மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

யாருக்காகவும் தனது கொள்கைகளை விட்டுக்கொடுக்காது பயமற்ற பேச்சும் செயலும் கொண்ட  சிம்ம ராசி அன்பர்களே..!

இந்தவாரம் பெண்களுடன் வீண் விவாதங்களை தவிர்க்கவும். இல்லையெனில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். சில வேண்டாத பேச்சுக்களால் மனம் சஞ்சலம் அடையும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும். வேண்டாத செலவுகள் கூட உண்டாகும். ஒருசில காரியங்களில் அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கப்பெறுவீர்கள். அலைச்சல்கள் உண்டாகும். அயலாருடைய உதவியை எதிர்பார்க்கும் சூழ்நிலை உருவாகும். மேல் அதிகாரிகள் மற்றும் பகைவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வேண்டாத உணவுகளால் வயிற்றில்  பிரச்சினைகள் ஏற்படும். மருத்துவ செலவுகள் உண்;;டாகும், எனவே உணவு விடயத்தில் கவனம் அவசியம்.

அதிர்ஷ்ட திகதி: 29
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம்சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)




உத்திரம் 2, 3, 4 அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தான் செய்யும் எந்த காரியத்திலும் வாய்மையும் முன்னுரிமையும் பெற எண்ணும் கன்னி ராசி அன்பர்களே..!

இந்தவாரம் புண்ணிய செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். இதனால் மனம் அமைதியடையும். மற்றும் நீண்ட நாள் காணாமல்போன பொருட்கள் கிடைக்கப்பெறுவீர்கள், வியாபாரத்தில் புதிய தொடர்புகள் உண்டாகும். தொழிலில் புதிய வழிமுறைகளை கையாண்டு வெற்றி காண்பீர்கள். இதனால் தனலாபங்கள் கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். மேலதிகாரிகளுடைய பாராட்டுக்களைப் பெறுவீர்கள். காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். வார இறுதியில் வேண்டாத நட்பினால் தொழிலில் நஷ்டம், சிக்கல்கள் தோன்றும். எனவே நண்பர்கள் விடயத்தில் கவனத்துடன் இருப்பது அவசியம்.

அதிர்ஷ்ட திகதி: 31
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா


சந்திராஷ்டமம்
ஜனவரி 29ஆம் திகதி மாலை 11.37 மணியிலிருந்து பெப்ரவரி 01ஆம் திகதி மாலை 12.28 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

தேடி சென்று உதவிடும் குணமும் முடிவுகளை பாராது முன்னேற்றத்திற்காக முழு மூச்சாக செயல்படும் துலா ராசி அன்பர்களே..!

இந்தவாரம் பொழுதுபோக்குகளில் ஈடுபடும் சூழ்நிலை உருவாகும். அப்பொழுது கவனத்துடன் இருப்பது அவசியம். தொழில் நிமிர்த்தமாக பிரயாணம் செல்லுதல், இதனால் லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். தொழிலில் பல புதிய வழிமுறைகளை கையாண்டு வெற்றி பெறுவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சுற்றத்தினர், நண்பர் வருகையினால் செலவுகள் அதிகம் காணப்படும். மேலும் நல்ல நண்பர்களின் சேர்க்கைகள் கிடைக்கும். அதை உரிய வழியில் பயன்படுத்தினால் நல்ல வெற்றியைப் பெறலாம். எனவே சரியான நேரத்தில் சரியான காரியங்களை செய்வது அவசியமாகும்.

அதிர்ஷ்ட திகதி: 29
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம்சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்) 


சந்திராஷ்டமம்;
பெப்ரவரி 01ஆம் திகதி மாலை 12.28 மணியிலிருந்து பெப்ரவரி 03ஆம் திகதி மாலை 11.52 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

ஆர்வத்துடன் சாதனைகள் படைக்கும் குணமுடையவர்களே, எடுத்த காரியத்தை முடிக்கக்கூடிய ஆற்றல் பெற்ற விருட்சிக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் இல்லத்தில் சுபச் செலவுகள் உண்டாகும், நல்ல காரியங்கள் செய்வதற்கு வழி வகைகள் கிடைக்கும். வயது மூத்தவர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். பிறருடைய உதவியை எதிர்பார்க்கும் சூழ்நிலை உருவாகும். இடையிடையே மனக்கசப்புகள் மற்றும் அலைச்சல்கள் காணப்படும். இருந்தாலும் மனதை தளர விடாதீர்கள், செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியை அடையும். வேலையில் உயர்பதவியில் உள்ளவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வேண்டாத பேச்சுக்களால் வியாபாரத்தில் நஷ்டம் அடைய நேரிடும். எனவே வார்த்தைகளில் நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியமாகும்.

அதிர்ஷ்ட திகதி: 1 
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)


சந்திராஷ்டமம்
பெப்ரவரி 0ஆம் திகதி மாலை 11.52 மணியிலிருந்து பெப்ரவரி 06ஆம் திகதி காலை 07.56 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

அனைவரிடமும் அன்பு காட்டும் உள்ளமும் தீமைகளை கண்டு விலகி செல்லும் பக்குவமும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே..!

இந்தவாரம் நல்ல நண்பர்களின் உறவுகள் கிடைக்கும், இதனால் மனதில் மகிழ்ச்சி உருவாகும். வெளியிடங்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். இருந்தாலும் உடலளவில்  அலைச்சல்கள் ஏற்படும். உடலில் உஷ்ணம் ஏற்பட்டு காய்ச்சல், தலைவலி ஆகியவை உண்டாகும். பிறருடைய உதவியை நாடும் நிலை உருவாகலாம்;. இதனால் வீண் மனஸ்தாபம் தோன்றும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியையே தழுவும். எனவே எந்த ஒரு புதிய முயற்சியையும் இக்காலத்தில் செய்யாமல் நன்று செய்யும் செயல்களில் சில பல தவறுகள் உண்டாகும். எனவே கவனத்துடன் பணிபுரிவது அவசியம்.

அதிர்ஷ்ட திகதி: 3
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுதுணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்




உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதில் இறைவனுக்கு முதலிடம் அளிக்கும் மகர ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொழிலில் புதிய முயற்சிகள் செய்து வியாபாரத்தை பெருக்கிக்கொள்வீர்கள்.  வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் செல்வீர்கள. இதனால் அதிக அளவில் லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். குடும்பத்தில் உடன் பிறந்தவர்களின் வருகையினால் மகிழ்ச்சி உண்டாகும். பொழுதுபோக்கு சம்பந்தப்பட்டவைகளில் செலவிடுவீர்கள். இதனால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடலில் அலைச்சல்கள் உண்டாகும். சில தவிர்க்க முடியாத செலவுகள் உண்டாகும். மனம் சஞ்சலமடையும். பெண்களுடன் விவாதங்கள் ஏற்பட்டு துன்பப்பட நேரிடும்.  எனவே பெண்களுடன் வீண் விவாதங்களை தவிர்க்கவும். மற்றவர்களினால் தேவையற்ற பிரச்சினைகளினால் குழப்பம், சங்கடங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திகதி: 3
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுதுணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்



அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

எதற்கும் தளராத நெஞ்சமும் ஆடம்பரம் இன்றி வாழ விரும்பும் கும்ப ராசி அன்பர்களே..!

புண்ணிய செய்திகளை கேட்பீர்கள். பெண்களினால் உதவி மற்றும் இன்பம் கிடைக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வியாபாரத்தில் புதிய வழி கிடைக்கப்பெற்று அதிக லாபங்களை அடைவீர்கள். வேறு இடமாற்றம் மனதில் மாறுதல்களை உண்டாக்கும். வீட்டில் களவுபோகும் சூழ்நிலைகள் உண்டாகலாம். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும். தேவையில்லாத பேச்சுகளால் மனக்கஷ்டங்கள் உண்டாகும். இதனால் வீண் அலைச்சல் காணப்படும். பணியில் அதிகாரிகளுடன் சுமூகமான உறவினை வளர்த்துக் கொள்வது அவசியமாகும். மற்றும் நிதானத்தை கடைபிடிப்பது அவசியமாகும். 

அதிர்ஷ்ட திகதி: 31
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர்க்கவும்
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா




பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.

தனகென்று மட்டும் எண்ணாது பிறரின் நலனுக்காக செயல்படும் பரந்த உள்ளம் கொண்ட மீனம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம்; சில நல்ல மனிதர்களின் சேர்க்கைகள் கிடைக்கப்பெறுவீர்கள். குடும்பத்தில் உடன் பிறந்தவர்களின் வருகை ஏற்படும், இதனால் இல்லத்தில் மகிழ்ச்சி நிலவும். உடலில் உஷ்ணம் ஏற்பட்டு காய்ச்சல், தலைவலி ஆகியவை உண்டாகும். வீணான மனக்கசப்புகள் உண்டாகும்.  எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடியும். எனவே எந்த ஒரு முயற்சியையும் செய்யாமல் இருப்பது நல்லது. பொழுதுபோக்கு சம்பந்தமானவைகளில் ஈடுபடுவீர்கள். ஈடுபடும்பொழுது கவனம் தேவை. மகிழ்ச்சியான செய்திகளை கேட்கும் சூழ்நிலை உருவாகும். வார இறுதியில் வியாபாரத்தில் புதிய வழிகள் ஏற்பட்டு லாபங்கள் அதிகளவில் கிடைக்கப்பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திகதி: 4 
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X