2025 ஜூன் 07, சனிக்கிழமை

'இதில் வெட்கப்படவேண்டியதில்லை...'

Princiya Dixci   / 2016 ஜூன் 13 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்தேகங்களே தெளிவை உண்டாக்குகின்றன. எல்லாமே சரியானது எனக் கண்ணை மூடிக்கொண்டு நம்பினால், எப்போது உண்மைகளைக் காண முடியும்?

ஒன்றுமே தெரியாதவனுக்கு ஒரு சந்தேகமும் எழுவதில்லை. ஆனால், எம்மில் சிலர் ஒன்றுமே புரியாமல், தெரிந்ததுபோல் பேசுவார்கள்.

இன்னும், சிலர் சந்தேகம் முனைந்து, சம்பந்தமே இல்லாத கேள்விகளைச் சபையில் சமர்ப்பிப்பார்கள். தங்களுக்கும் எல்லாமே புரியும் என வெளியுலகுக்குத் தெரிய வேண்டுமென்பதற்காக, முட்டாள் தனமாகப் பேசி, தங்களின் உருவத்தைக் காட்டிக் கேலிக்குரியவராக மாறிவிடுகின்றனர்.

குறித்த ஒரு விடயத்தைத் தெரிந்து கொள்ள, அதுபற்றி அறியக் கற்றுக்கொள்ள முயற்சி எடுப்பீர்களாக.

கூச்சப்படாமல், சர்வம், மமதைகளைக் களைந்து விடயமறிந்தவர்களை நாடி, அறிவை வளர்ப்பீர்களாக.

கல்வியில் முழுமை பெற்றவர் எவருமேயில்லை. எல்லோருமே ஏதோவொரு துறையில் மாணவர்கள்தான். இதில் வெட்கப்படவேண்டியதில்லை.

வாழ்வியல் தரிசனம் 13/06/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .