2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

‘உழைப்பு அழகைத் தரும்’

Editorial   / 2018 பெப்ரவரி 06 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உழைக்கும் முன் களைப்படைதல் ஆகாது. கருமம் எதுவெனப் புரியாமலே அது பெரிய கஷ்டமான காரியம் என எண்ணினால் எந்தப் பணியையும் செய்யமுடியாது.

வேலை செய்யும்போது ஏற்படும் உற்சாகத்தை அனுபவித்துப் பார்க்க வேண்டும். பலருக்கு இருக்கையில் இருந்து தொழில் செய்யவேண்டியுள்ளது. இதனால் உடல் பலம் இழந்து விடுகின்றது.

தேகத்துக்கு வலிமையூட்ட களைப்பை எண்ணி, கை கால் அவயவங்களுக்குரிய  பணிகளைச் செய்திட வேண்டும்.

வியர்வை சிந்துவது அயர்ச்சியைப் போக்கிவிடும். உடலை நோகாது வைத்திருக்கு எண்ணினால் நோய்களின் நண்பர்களாகி விடுவர்.எந்தப் பதவியில் இருப்பவர்களாயினும் உடலை வருத்தி உழைப்பை நாட வேண்டும். உழைப்பு அழகைத் தரும்.

வாழ்வியல் தரிசனம் 06/02/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X