Editorial / 2017 ஓகஸ்ட் 28 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மிகவும் வெட்கப்படக்கூடியதும் கேவலமானதுமான விடயங்களில் ஒன்று, தனக்கு உரிமையில்லாத எந்தப் பொருட்களிலும் உரிமை கோருவதாகும்.
இன்று பேராசையினாலும் அதிகார வெறியினாலும் பிறரது சொத்துகளை அபாண்டமாகப் பறிக்க எண்ணும் போக்கிரிகளின் தொகை அதிகரித்துவிட்டது.
இவர்களிடம் இருந்து தப்பிக்க முடியாமல் பலர் அவஸ்தைப்படுவதும் அவர்களுக்குக் கைகொடுத்து உதவிபுரிய எவரும் முன்வராமல் இருப்பதும் துரதிஷ்டமானதாகும்.
நீதிமன்றம், பொலிஸ்நிலையங்களின் வாசற்படிகள் ஏறி, இறங்கத் தெரியாதவர்களால் என்ன செய்ய முடியும். அதிகார வர்க்கத்தின், இடுக்கிப் பிடியினுள் உலகம் கட்டுப்பட்டுவிட்டதாகக் குமுறும் மக்கள் ஏராளம். நீதி கிடைக்க நீண்டகாலம், வேண்டுமென்றால் படும் துன்பங்களுக்கு என்ன பதில் உண்டு?
வாழ்வியல் தரிசனம் 28/08/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .