2025 ஜூன் 07, சனிக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 29/12/2015

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தகுதி, தராதரம் இல்லாதவர்களை வேண்டுமென்றே புகழ்ந்து கொண்டாடினால், புகழ்ச்சியைக் கேட்டவர் அதனை உண்மையென நம்பினால், என்ன ஆகும் தெரியுமா?

ஒருவரது வளர்ச்சிக்கு இத்தகைய வீணான பேச்சுக்கள், அவரை உருப்படியான மனிதராக ஆக்காமல் இருப்பதுடன், மென்மேலும் கீழான தகுதியற்ற நிலைக்கே ஆளாக்கப்பட்டு விடுவர்.

ஒருவர் தன்னைத்தானே புகழ்வது கூட இந்த அறியாமையின் ஒரு பிரதான காரணமாகும்.

தற்புகழ்ச்சியினால் ஒருவர் தன்னைத்தான் இழக்கின்றார். தன்னைப் புரிந்தால் மட்டுமே, தன்னை மென்மேலும் மெருகூட்டி புதுமனிதனாக உருக்கொடுக்க முடியும்.

தகுதியற்றவர்களை ஏளனம் செய்யாமல், வாழ்க்கையின் ஆதாரங்களைச் சொல்லிக் கொடுத்தலே மானுடப் பண்பாகும்.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .