Princiya Dixci / 2016 ஜனவரி 29 , மு.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த முழு உலகமும் உய்யவேண்டும் என்ற கோரிக்கையை இறைவனிடம் சமர்ப்பிப்பவர்கள் தொகை, மிகமிகக் குறைவுதான்.
என்னை, எனது மனைவி மக்களை அத்துடன் தனது நெருங்கிய உறவினர் நண்பர்களுக்காகத் தான், வேண்டுதலைக் கடவுள் முன் வைப்பார்கள்.
ஆனால், முதல் முன்னுரிமை, தன்னையும் தனது தாய் தந்தை, பிள்ளைகளுடன் தனது உடன் பிறப்புக்களை மட்டுமே மனிதர்கள் முக்கிய ஆன்மாவாகக் கருதுகின்றனர்.
ஆனால், இந்த உலகை மட்டுமல்ல. முழுப்பிரபஞ்சத்தையும் அங்குள்ள உயிரினங்களையும் அவற்றைத் தாங்கும் அவைக்குரிய நிலத்தை, இயற்கை வளங்களையும் பாதுகாத்துக் கொள்வாய் என்றே முற்றும் துறந்த ஆன்மீக வள்ளல்கள் இறைவனிடம் இறைஞ்சுவார்கள்.
நாங்களும் இவ்வண்ணமே. கடவுளைக் கேட்டு, இதயத்தை விரித்து வேண்டுவோமாக.
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
7 hours ago
09 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
09 Feb 2026