Princiya Dixci / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
தங்களுக்கு எல்லா உண்மைகளும் தெரியும் என்ற கரணத்தினால் பிறரைப் பற்றிய தகவல்களை எந்தவித காரணமின்றிச் சொல்லித் திரிவது நல்லது அல்ல.
இதனால் சொல்லப்படும் நபர்களுக்கு மட்டுமல்ல, உண்மையைச் சொல்கின்றேன் எனச் சொல்பவருக்கும் சோதனை வரலாம். பிறரது உண்மையான அந்தரங்கங்களைச் சொல்வது எமக்குரிய கருமமும் அல்ல.
தங்களது சொந்த வாழ்க்கையின் பிரச்சினைகளையும் தாங்கள் செய்த தவறுகளையும் மறைத்து, அதனிலிருந்து மீள அடுத்தவர் பிரச்சினையில் கரிசனைக் காட்டுவது போல் நடப்பதால் நிம்மதியோ, திருப்தியோ ஏற்படப் போவதில்லை.
மனம் அனுதினமும் எங்கள் தவறுகளை உணர்ந்தால் எச்சரிக்கை செய்த வண்ணமேயிருக்கும்.
உண்மையைச் சொல்லும் முறையிலும் நியாய தர்மம் உண்டு.
சிந்திக்க...
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
7 hours ago
09 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
09 Feb 2026