2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 13/05/2016

Princiya Dixci   / 2016 மே 13 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோல்வியடைந்தால் மனம் சோர்ந்திடக் கூடாது என்கிறோம்.

அதேபோல், வெற்றிகளை நாம் பெற்றுவிட்டாலும் உள்ளம் பேதலிக்கக்கூடாது. அதாவது, வெற்றி பெற்றுவிட்டோம் என நாம் மமதை கொண்டு தங்களை மறந்து எவரையும் உதாசீனம் செய்யக்கூடாது.

எமக்கு அனுகூலமான விடயங்கள் நடந்தால் சந்தோஷமடையாமல் இருக்க முடியுமா? எங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வரப்பிரசாதங்களும் கடவுளால் கிடைக்கப்பட்டது எனக் கருதி, அதனை ஏற்று அவருக்கே அதனை அர்ப்பணம் செய்வதே நன்றியறிதலாகும். மேலும், எமக்கு இது விடயத்தில் உதவியோரையும் நினைக்க வேண்டும்.

பணிவுடன் நல்லவற்றை ஏற்பதே அடுத்தடுத்து வரும் வெகுமதிகளுக்கான வழியுமாகும்.

எல்லாமே என்னாலே தான் என எண்ணி விடுதல் ஆணவத்தை அணைத்தலாகும்.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .