2024 மே 19, ஞாயிற்றுக்கிழமை

மரடோனா தங்கிய அறையில் தங்க விரும்பும் ரசிகர்கள்

Kogilavani   / 2012 ஒக்டோபர் 28 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் கேராளா மாநிலத்திற்கு இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு அண்மையில் வருகை தந்திருந்த  உலகப் புகழ் பெற்ற கால்பந்தாட்ட வீரரான அர்ஜென்டினாவின் மரடோனா தங்கியிருந்த ஹோட்டல் அறையில் கேரள ரசிகர்களும் முக்கியஸ்தர்களும் தங்க விரும்புவதனால் அந்த ஹோட்டல் அறைக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

மரடோனா கண்ணூரில் உள்ள 'புளூ நைல்' 4 நட்சத்திர ஓட்டலில் அறை எண்.399-ல் தங்கி இருந்தார்.

இவர் இரண்டு நாள் விஜயத்தை முடித்துகொண்டு நாடு திரும்பிய நிலையில் அவர் தங்கியிருந்த அந்த ஹோட்டல் அறையில்  தங்கிச் செல்வதற்கு கால்பந்து ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இதனால் அந்த அறை அருங்காட்சியகமாக மாறியுள்ளது என ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

அந்த ஹோட்டல் அறையில் மரடோனா தனது காதலியுடன் இருக்கும் புகைப்படம் இருக்கிறது. மரடோனாவின் பேரன் பெஞ்சமின் புகைப்படமும் அங்குதான் இருக்கிறது. இந்த அறையை 'மரடோனா மியூசியம்' என்று பெயரிட்டு பாதுகாக்க போவதாகவும் ஹோட்டல் அதிபர் ரவீந்திரன் கூறியுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .