2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

பாடகர் எஸ்.பி.பி. வைத்தியசாலையில்

Kogilavani   / 2014 ஜனவரி 20 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியப் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல்நலக் குறைவால் தென்னாபிரிக்காவில் உள்ள மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்கா, ஜோஹன்னஸ்பர்க்கில் கடந்த சனிக்கிழமை சர்வதேச திரைப்பட விழா ஆரம்பமானது.

இவ்விழாவின் ஆரம்ப நிகழ்வாக சென்னை எக்ஸ்பிரஸ் இந்தி திரைப்படத்தின் பாடல் வரிகளை 15 மொழிகளில் பாடிய பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு (67) வாழ்நாள் சாதனையாளருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிலையில் இவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் தென்னாபிரிக்காவில் உள்ள மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டார்.

இருந்தும் அவருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை. இதையடுத்து அவரை தனி விமானம் மூலம் சென்னை கொண்டு வருவதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து விருந்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளுக்கு இடையே கலாசார மற்றும் சகோதரத்துவ தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த திரைப்பட விழா ((International Indian Film Festival of South Africa (IIFFSA)) நடத்தப்படுகிறது.

இருநாடுகளின் பிராந்திய மொழிப் படங்களுக்கும் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X