2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

அந்தரங்க உறுப்பில் வைத்து போதைப்பொருள் கடத்திய பெண் கைது

Kogilavani   / 2011 மார்ச் 22 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தடை செய்யப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளை தனது அந்தரங்க உறுப்பிற்குள் வைத்து கடத்திச்சென்ற பெண்ணொருவரை  போலந்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடார்ஸியானா சிமென்ஸ்கா எனும் 23 வயதுடைய பெண் 71 போதைப் பொருள் உருண்டைகளை தனது பெண்ணுறுப்பிற்குள் மறைத்து வைத்து கடத்திச் செல்ல முற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் தற்போது 5 வருட சிறை தண்டனையை எதிர் நோக்கியுள்ளார்.

அவர் ஜேர்மன் எல்லையிலிருந்து போலந்திற்கு இப்போதை பொருளை கடத்த முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சோதனையின் பின்னர்,  மேற்படி பெண்ணை கைது செய்த பொலிஸார்  அவரிடமிருந்து அரைக் கிலோகிராம் போதை பொருளை கைப்பற்றியுள்ளனர்.

சுங்க திணைக்களத்தின் பேச்சாளர் அன்னா கோலன் இது குறித்து, 'நாங்கள் அவள் நடக்கும் விதத்தைப் பார்க்கும்போது ஏதோ ஒரு வித்தியாசம் தெரிந்தது. அதன் பின்பு எங்களது சந்தேகம் அதிகரித்தது. அவள் அசௌகரியமான நடையை நடந்தாள். ஒவ்வொரு அடியையும் வலியுடன் நடப்பதை நாங்கள் அவதானித்தோம்' என்று கூறியுள்ளார்.
 

 

 


  Comments - 0

  • abdulmohmed Wednesday, 23 March 2011 07:24 PM

    காசேதான் கடவுளடா. இவர்கள் இப்படி நினைக்கிறார்கள்.

    Reply : 0       0

    xlntgson Saturday, 26 March 2011 09:08 PM

    உள்ளே இருந்து கொல்லும் வியாதி, உடலுக்குள் வெடித்து செத்தவர்களும் உண்டு!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .