Shanmugan Murugavel / 2016 ஜனவரி 20 , பி.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹாங்கோவர் இல்லாத மதுபானமொன்றைக் கண்டுபிடித்துள்ளதாக, வடகொரியா அறிவித்துள்ளது. அந்நாட்டு விஞ்ஞானிகளால் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ள அந்நாட்டின் அரச ஊடகம் அறிவித்தள்ளது.
மதுபானம் அருந்தியவர்கள், சில மணிநேரங்களின் பின்பு, உளவியல்ரீதியாகவும் உடலியல்ரீதியாகவும் ஏற்படும் விரும்பத்தகாத மாற்றங்கள், ஹாங்கோவர் என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றன.
இந்நிலையிலேயே, 30 தொடக்கம் 40 சதவீத அல்ககோல் அளவைக் கொண்ட இந்த மதுபானம், அவ்வாறான ஹாங்கோவர் விளைவுகளைத் தராது என அறிவிக்கப்படுகிறது.
ஹாங்கோவர் விளைவுகளைத் தராது என்பதைத் தவிர, மருத்துவ ரீதியாக இது அதிக பயனைத் தரவல்லது எனவும், அவ்வூடகம் தெரிவித்துள்ளது.
எனினும், கடந்த காலங்களில், நம்பமுடியாத மருத்துவக் கண்டுபிடிப்புகள் பற்றிய செய்திகளை, வடகொரியா வெளியிட்டு வந்தது. சில காலங்களுக்கு முன்னர், மெர்ஸ், சார்ஸ், எயிட்ஸ் ஆகியவற்றைக் குணப்படுத்தும் மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக அந்நாடு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .