A.P.Mathan / 2012 ஏப்ரல் 17 , மு.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இங்கிலாந்து அணி முதல் தர அணி என்றாலும் பாகிஸ்தானில் டெஸ்ட் போட்டிகளில் அடி வாங்கி வந்து இருந்தது. அங்கே மூன்று தோல்விகள். இலங்கையில் முதல் போட்டி தோல்வி. மொத்தம் நான்கு போட்டிகள் தோல்வி. இப்படியான நிலையில் எதிரணி மீது அழுத்தம் பிரயோகிப்பது மிக இலகு. இரண்டாவது போட்டியில் இலங்கை அணியின் மிக மோசமான துடுப்பாட்டமே அதற்கு முக்கியமான கரணம் ஆகும். துடுப்பாட்ட வீரர்களுக்கு சதம் தரக்கூடிய பி.சரவணமுத்து மைதானத்தில் இரண்டு இன்னிங்சிலும் 300 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்துள்ளனர். வெற்றி பெறக்கூடிய அளவில் பந்து வீச்சு அமையாவிட்டாலும் சமநிலை முடிவுக்கு கொண்டு செல்லக் கூடிய அளவு பந்து வீச்சு. முதற்ப் போட்டியிலும் துடுப்பாட்டம் மிகச் சிறப்பாக இருந்தது என்று சொல்லவதற்கு இல்லை. பந்து வீச்சு சிறப்பாக அமைந்ததன் காரணமாகவே வெற்றி பெற முடிந்தது. இலங்கை அணி துடுப்பாட்டத்தை இன்னும் சரி செய்து கொள்ள வேண்டும். இல்லாவிடின் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவது கஷ்டம் என்ற நிலையை தரும். .jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)


8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago