2024 மே 05, ஞாயிற்றுக்கிழமை

அதீத போதைப்பொருள் பாவனையால் மரணம்

Janu   / 2024 பெப்ரவரி 01 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து அண்மையில் விடுதலையான இளைஞன் , அதீத போதைப்பொருள் பாவனையாலையே  உயிரிழந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது. 

போதைப்பொருள் தொடர்பான வழக்கொன்றில் சிறைத்தண்டனை அனுபவித்து கடந்த 26ஆம் திகதி விடுதலையான இளைஞன் செவ்வாய்க்கிழமை (30)  இரவு , வீட்டில் மூச்சின்றி  காணப்பட்டதை அடுத்து , இளைஞனை வைத்தியசாலை வீட்டார் கொண்டுச் சென்ற போது , இளைஞன் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். 

அதீத அளவில் போதைப்பொருளை நுகர்ந்தமையாலையே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து  தெரியவந்துள்ளது.   

எம்.றொசாந்த் 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X