2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

அந்தோனியார் ஆலய பின் பகுதியில் இருந்து சடலம் மீட்பு

Janu   / 2024 செப்டெம்பர் 26 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பியாறு அந்தோனியார் ஆலய வளாகத்தின் பின் பகுதியில் உள்ள சிற்றாலயத்திற்கு முன்பாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் தன் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் வியாழக்கிழமை(26) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிலங்குளம் முதலை குத்தி பகுதியை சேர்ந்த 45 வயதுடைய அந்தோனி தெய்வீகன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் திடீர் மரண விசாரணை அதிகாரி பா.பிரபா நந்தன் சடலத்தை பார்வையிட்டு சடலத்தை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலுப்பைக்கடவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 லெம்பர்ட் றொசரியன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X