2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

அமெரிக்க தூதரகத்திற்கு சென்று திரும்பியவரை காணவில்லை

Janu   / 2023 ஒக்டோபர் 25 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்திலிருந்து விசா அலுவல்கள் நிமித்தம் அமெரிக்க தூதரகத்திற்குச் சென்று  அலுவல்களை நிறைவு செய்து விட்டு  திரும்பிய முதியவரை கடந்த 23 ஆம் திகதி முதல் காணவில்லை என உறவினர்கள் பொலிஸாரிடம்  முறைப்பாடு செய்துள்ளனர்.

23.10.2023  அன்று கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சென்று அங்கு  விசா அலுவல்களை நிறைவு செய்து விட்டு  ஆட்டுப்பட்டித் தெருவில் உள்ள விடுதி ஒன்றிற்கு  உறவினர்களுடன் திரும்பிய முதியவர்  அன்று   பிற்பகல் 3 மணியளவில் கடைக்குச் செல்வதாக தெரிவித்து விடுதியிலிருந்து புறப்பட்டவர் இன்று வரை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

விடுதியிலிருந்து புறப்பட்டுச் செல்லும் போது பற்றர் கலர்சேட் மற்றும்
வேட்டி அணிந்திருந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்  எனவே இவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0774354409 எனும் தொலைபேசி இலக்கத்திறகு அறிவிக்குமாறும் உறவினர்களால் கோரப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X