2024 மே 05, ஞாயிற்றுக்கிழமை

அழுகிய நிலையில் முதியவரின் சடலம் மீட்பு

Janu   / 2024 மார்ச் 05 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர் நிலையில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் செவ்வாய்கிழமை (05) மீட்க்கப்பட்டுள்ளது .

கைவிடப்பட்ட கற்க்குவாரியாக காணப்பட்ட அந்த பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக  பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற  தகவலுக்கமையவே  பொலிஸார் குறித்த  இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது .

சடலம் அழுகிய நிலையில் உள்ளமையினால்  சில தினங்களிற்கு முன்னராகவே குறித்த நபர்  இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும்  இச்  சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஓமந்தை பொலிஸார் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர் .

க. அகரன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X