2025 மே 14, புதன்கிழமை

இனந்தெரியாதோரால் வாள்வெட்டு

Freelancer   / 2023 ஒக்டோபர் 09 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லூர் அரசடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(08) திகதி இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். 

காயமடைந்த இளைஞர் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வெள்ளை நிற காரில் வந்த நான்கு பேர் கொண்ட வன்முறைக் கும்பல் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இச் சம்பவத்தில் கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞரே இதன் போது காயமடைந்தார். 

மேலும் இச் சம்பவம் தொடர்பாக யாழ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நிதர்ஷன் வினோத்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X