2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

இறுதி சடங்குக்கு வந்தவர், காலனுடன் சென்றார்

Janu   / 2024 நவம்பர் 14 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மரண சடங்குக்கு வந்த மட்டக்களப்பை சேர்ந்த ஒருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியை சேர்ந்த குகதாஸ் விஜிதா (வயது 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

உரும்பிராய் பகுதியில் நடைபெற்ற மரண சடங்குக்கு கடந்த 09 ஆம் திகதி வருகை தந்த குறித்த நபர்  மறுநாள் மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் போது , கொக்காவில் பகுதியில் வைத்து பன்றி ஒன்று வீதியின் குறுக்கே ஓடியதில் , அவர் பயணித்த வாகனம் பன்றியுடன் மோதி விபத்துக்கு உள்ளானது. 

விபத்தில் படுகாயமடைந்தவரை மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் புதன்கிழமை (13) அன்று  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

எம் . றொசாந்த் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X