2025 மே 14, புதன்கிழமை

கஞ்சா பொதியுடன் பெண் கைது

Freelancer   / 2023 ஒக்டோபர் 04 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேசாலை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட காட்டாஸ்பத்திரி கிராம பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதியுடன் பெண் ஒருவர் இன்றைய தினம் புதன்கிழமை(4) கைது செய்யப்பட்டுள்ளார்.



பேசாலை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார்  பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரின் சோதனை முன்னெடுத்தனர்.

இதன் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த  கேரள கஞ்சா பொதியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்

குறித்த பொதியில் சுமார் 2 கிலோ 300 கிராம்  கேரள கஞ்சா இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் போது குறித்த வீட்டில் இருந்த 44 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதி மற்றும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண் பேசாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பேசாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எஸ்.றொசேரியன் லெம்பேட்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X