Freelancer / 2023 ஒக்டோபர் 06 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
யது பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில் மண்டூஸ் புயலினால் பாதிக்கப்பட்ட 40 கடற்றொழிலாளர்களுக்கு தலா 45 ஆயிரம் பெறுமதியான மீன்பிடி வலைகள் மற்றும் அதற்கான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் (மெசிடோ) மேற்படி பொருட்கள் இன்று (06)திகதி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பிரதிநிதிகள் மீனவர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.




அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .