2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கடலட்டை பிடித்த நால்வர் கைது

Freelancer   / 2023 நவம்பர் 05 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணம் - குருநகர் கடல்பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த நால்வர் இன்று (05) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலட்டையை பிடித்துக்கொண்டு இருந்தவேளை மண்டைதீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களது படகு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட  நால்வரும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று பகல் அவர்களை யாழ்ப்பாணத்தில் உள்ள நீரியல்வள திணைக்களத்திற்கு  அழைத்து வந்த பின்னர், நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.M 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X