2026 மார்ச் 18, புதன்கிழமை

கரையோரத்தினூடாக தொடரும் உலக சாதனை பயணம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 06 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். தில்லைநாதன்

உலக சாதனை படைக்கும் நோக்கில் கரையோரத்தின் ஊடாக இலங்கையை சுற்றி பயணித்து வரும் சாதனை வீரர் இன்றையதினம் (06)திகதி  பருத்தித்துறை கடற்கரையை வந்தடைந்து வடமராட்சி கரையோரத்தினூடாக பயணத்தை தொடர்ந்துள்ளார்.

சமன் உடுகம சூரி (வயது-52) என்பவர் கடந்த செப்டெம்பர் 08 ஆம் திகதி கொழும்பு துறைமுக நகரில் இருந்து சாதனை நடைபயணத்தை ஆரம்பித்துள்ளார்.

இதற்கமைய கொழும்பு துறைமுக நகரில் இருந்து ஆரம்பித்து அங்கேயே நிறைவு செய்யும் வகையில் திட்டமிட்டுள்ள நிலையில் இன்றையதினம் வடமராட்சியை வந்தடைந்துள்ளார்.

தொடர்ந்து வடமராட்சி கரையோரங்களினூடாக யாழ்ப்பாணம் கரையோரத்தை அடைந்து இலங்கையின் மேற்கு கரைவழியே கொழும்பு துறைமுக நகரை சென்றடைந்து நிறைவு செய்ய உள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X