Freelancer / 2022 நவம்பர் 15 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
'மரம் நாட்டுவோம் எதிர்கால சந்ததியைப் பாதுகாப்போம்' எனும் தொனிப் பொருளில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதனின் எண்ணக்கருவில் வன்னி மண் அறக்கட்டளையின் நெறிப்படுத்தலில் நேற்று (14) மர நடுகை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
குறித்த நிகழ்வு மன்னார் பரிகாரி கண்டல் அ.த.க பாடசாலையில் அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில், ஆசிரியர்கள், மாணவர்கள், மன்னார் மாவட்ட வனவளத் திணைக்கள அதிகாரிகள், வன்னிமண் அறக்கட்டளை உறுப்பினர்கள்,பழைய மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது பாடசாலை வளாகத்தில் 100 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன. (a)

6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026