Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 ஜூலை 18 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் செவ்வாய்க்கிழமை(16) அன்று ஒரே நாளில் பெரியகமம் பகுதியில் உள்ள நான்கு வீடுகளில் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் திருட்டு இடம்பெற்ற வீட்டில் இருந்த CCTV காணொளியை பார்வையிட்ட போது சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் சொந்த வீட்டுக்குள் நுழைவது போன்று நுழைத்து பொறுமையாக வீட்டை உடைத்து வீட்டில் உள்ள குளிர்பான பெட்டியில் இருந்து நீர் அருந்தி விட்டு வீடு முழுவதும் தேடுதல் மேற்கொண்டு வீட்டில் இருந்த நகைகளை கொள்ளை இட்டு சென்றுள்ளார்.
அதே நேரம் குறித்த நபர் அருகில் இருந்த இன்னும் ஒரு வீட்டிலும் எவ்வாறு புகுந்து அவ் வீட்டில் இருந்த தாலி உட்பட பல லட்சம் பெறுமதியான நகைகளை கொள்ளை அடித்துள்ளார்.
வீட்டில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பின்னர் வெளியில் வந்து கதவை உடைத்த போது கதவில் உள்ள கை அடையாளங்களை இல்லாது செய்யும் நோக்குடன் தண்ணீரால் துடைக்கும் CCTV காட்சியும் பதிவாக உள்ளது.
இவ்வாறு மன்னார் சாவற்கட்டு பகுதியில் நான்கு திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் குறித்த வீட்டார் சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எஸ்.ஆர்.லெம்பேட்
48 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago