2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தனிமையில் வாழ்ந்த பெண் வன்புணர்வு: சந்தேகநபர் கைது

Niroshini   / 2021 ஜூலை 11 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். றொசாந்த்

தனிமையில் வாழ்ந்த பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியமை, சட்டத்துக்குப் புறம்பான வன்புணர்வு மற்றும் படுகாயம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், 30 வயது நபர் ஒருவர், வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை (09) இரவு, அத்துமீறி வீடு புகுந்த குறித்த நபர், வீட்டில் தனிமையில் வாழ்ந்த 35 வயதான பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், சந்தேக நபர் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .