2025 மே 13, செவ்வாய்க்கிழமை

திடீர் சுகவீனமுற்ற பெண் உயிரிழப்பு

Mayu   / 2023 டிசெம்பர் 14 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ம. துசிந்தினி (வயது 26) எனும் பெண் திடீர் சுகவீனத்தால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

கடந்த 11ஆம் திகதி திடீர் சுகவீனம் ஏற்பட்ட நிலையில், தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,  மேலதிக சிகிச்சைக்காக யாழ்போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதோடு

சிகிச்சை பலனின்றி புதன்கிழமை (13) உயிரிழந்துள்ளார். 

கடந்த 03ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டதாகவும் , 11ஆம் திகதியே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும்,  உயிரிழப்புக்கு மூளை காய்ச்சல் ஏற்பட்டு இருக்கலாம் என பொலிஸாரின் விசாரணைகளிள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை , உயிரிழந்த பெண்ணின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எம். றொசாந்த் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X